read.cash Log in
@Muthuking

@Muthuking in May 2020

@Muthuking

Sri Rama naga mandhira Magimai ஸ்ரீ இராம நாம மந்திர **மகிமை** 🌷 1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும். 2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் . 3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம…

@Muthuking

Nanga Onnum Mittal Alla *1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான். என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.* *2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த…

@Muthuking

Sri Rama naga Mandhira Magimai Part - 2 7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! 8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் . 9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு,…

@Muthuking

Kaliyugathil Iyanggar Mattrum Iyar நானும் என் ஜோதிடம் பார்க்கும் நண்பர்கள் பேசி கொண்டு இருந்தோம். அதில் குறிப்பாக நீங்கள் பிராமணர்கள் என்றால், உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் மட்டுமே மேலும் படிக்கவும். 1. நீங்கள் பிறந்த வருடம் 1977 முதல் 1982 வரையா? 2. நீங்கள் 2006 அல்லது 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா? இதில் இரண்டுமே ஆம் என்றால், மனதை இன்னும் கொஞ்சம் தைரியம் வைத்து படிக்கவும் இன்னும் 30 வருடங்களில் ஐயர் மற்றும் ஐய்யங்கார் என்ற பிரிவு உள்ள பிராமணர்கள் இனி…

@Muthuking

Fourth Wall Bhagiyam Sankar படித்து முடித்தவுடன் தோன்றியது. இப்புத்தகத்தில் வரும் மனிதர்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று தான். இப்புத்தகத்தைப் படிக்கும் போது பல தடவை அழுதேன். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமேலேயே கண்ணில் கண்ணீர் வடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த பாட்டி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன். புத்தகத்தை படித்து முடித்த பிறகுதான்…

@Muthuking

Three Face Swaami Sangli Boothathaar திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி கிராமம் மணிமுத்தாறு அருவிக்கரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூன்று முக சுவாமி சங்கிலி பூதத்தார். ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில்…

@Muthuking

Alaivarisai M.Kamuththurai இந்த புத்தகமும் "முள்" போல ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கிறது. நாயகி பிறப்பதோடு தொடங்குகிறது கதை. குடும்பத்தின் அன்பில் வளர்ந்த அவள். ஆசிரியர் கோபித்துக் கொண்டார் என்பதற்காக அவளை பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று படிப்பை நிறுத்துகிறாள் அம்மாயி. அவள் எவ்வளவோ சொல்லியும் அவளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவில்லை. அவள் வாழ்வின் முதல் முடிவு அவளைக் கேட்டு எடுக்கப் படவில்லை. அவள் வயதுக்கு வந்ததை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பதினான்கு பதினைந்து வயதிலேயே…

@Muthuking

Venal Kalapriya Novel இது கலாப்ரியாவின் முதல் நாவல் என்றால் நம்ப முடியாது. மிக அழகாக ஒரு நாவலை எழுதியுள்ளார் . ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை கதையை சொல்கிறது வேனல். பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களே. இது அப்பெண்களின் கண்ணீர் நிறைந்த கதை.இந்த நாவல் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. பெரியாரின் பேச்சு திமுகாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் தாக்கம் என்று அந்த காலகட்டத்தின் அனைத்தும் இக்கதையில் வருகிறது. பல அடுக்கு கதைகளை கொண்டது இந்த நாவல். கொட்டகை வீடு தான்…

@Muthuking

Koodayila Karuvadu Novel கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம்பொருத்தம் இதைப் போல தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே அள்ளி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்தி கெட்ட விதியாலே ஆஹா புத்தி…

@Muthuking

Naan Oru Rasiyilla Raja - Oru Thalai Raagam Novel நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு (நான்) பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களை காணவில்லை பலர் இழுக்க தேர் ஆனேன் ஊர்வலமே நடக்கவில்லை கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே கை இரண்டும் போடட்டும் தாளங்களே (Repeat First Paragraph நான் ) என் கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபம் இல்லை இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன் மனதினிலே சாந்தி இல்லை தோல்விதனை எழுதட்டும் வரலாறு…

@Muthuking

Vaasamill Flower This need Happiness Novel வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் (வாசமில்லா) பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே (வாசமில்லா) என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே (வாசமில்லா) மாதங்களை…

@Muthuking

Silence - Erling Kagge **எர்லிங் ககே** மூன்று துருவங்களை அடைந்த முதல் மனிதன். வாட துருவம் தென் துருவம் மற்றும் எவெரெஸ்ட் மலை மூன்றையும் தனியாக அடைந்தவர். அவருடைய இந்த புத்தகம் அமைதியின் தியானம் என்றே சொல்லலாம்.இந்த புத்தகத்தில் அவர் மூன்று கேள்விகளை எழுப்புகிறார். அதாவது 1)what is silence? அமைதி என்றால் என்ன ? 2)Where is it? அமைதி எங்கு இருக்கிறது ? 3)why is it more important than ever ? அது ஏன் அவசியம் ? இந்த மூன்று கேள்விகளுக்கும் முப்பத்திமூன்று பதில்களை அளித்துள்ளார்.…

@Muthuking

Visaranai Commission Sa.Kandhaswami Story நீண்ட காலமாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது, ஏனோ இந்த நாவலின் பெயர் என்னுள் ஏதோ செய்தது. ஏதோ கிரிமினல் நாவலாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.கடந்த வாரம் நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து விட்டேன் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் வாசிக்க நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் வாசிக்க கூடிய புத்தகம்தான். ***வாழ்விலே மதிப்பு , மரியாதை எனபதை உணர்த்த நல்லது தீயது என்ற பாகுபாட்டில் எல்லாமே அடங்கி இருக்கிறது.***…

@Muthuking

Penguins Stopped Playing - Harry Thompson பழைய புத்தகக் கடையில் என்னை எடு என்று என்னைப் பார்த்து ஏங்கி கேட்டுக் கொண்டிருந்தது. விட்டுவிட்டு வரமுடியாமல் வாங்கி வந்தேன். நான் இந்த அளவுக்கு விளையாட்டு சம்மந்தமான புத்தகங்களில் சிரித்ததில்லை. இது இரண்டு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கிரிக்கெட் குழுவின் கதை.ஹரி தாம்சன் மற்றும் பெர்க்மன் இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். கிரிக்கெட் மேல் இருந்த ஆர்வத்தால் அருகில் இருந்த நண்பர்களை சேர்த்து "Captain Scott Invitation XI"…

@Muthuking

World's Very long Toilet Tamil Story - AgaraMudhalvan Part II *நீ வாழ்க்கையின் உவகையை அடைய வேண்டுமெனில் சாவின் சமீபத்தையாவது தரிசிக்க வேண்டும்.* "சித்தப்பாவின் கதை" என்னும் கதையில் வரும் ஒசாமா சித்தப்பா கதாப்பாத்திரம் பல தமிழக அரசியல்வாதிகளை ஞாபகப் படுத்துகிறது. அவரும்தான் என்ன செய்வார்.அவரால் என்னதான் செய்ய முடியும் பணத்திற்காக இயக்கத்தினரை காட்டித்தான் கொடுக்க முடியும். இயக்கமும் தண்டனை விதிப்பதில் இராணுவத்திற்கு நிகரானதுதான். "அகல்" என்னும் கதையில் இயக்கத்தினரால்…

@Muthuking

World's Very long Toilet Tamil Story - AgaraMudhalvan ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள். *வெள்ளி விழுவதற்கெல்லாம் நீ கூச்சலிடாதே.. எங்களுக்கு வானமே இல்லை. கொஞ்சநேரம் இந்த கடலையே பார்த்துக்கொண்டிரு.. இதுதான் உன் மூதாதையருக்கான கல்லறை.* இக்கதைகளில் வரும் போராளிகள் அனைவரும் தியாகத்தின்…

@Muthuking

Visaranai Commission Sa.Kandhaswami Tamil Story Part - 2 பேருந்து டெப்போவில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் தற்கால அரசியல்தான் கதையின் மய்யம். நடத்துனர்கள் ஓட்டுனர்களின் பிரச்னைகள் மற்றும் அங்கு நடக்கும் அரசியல் ஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கம் ஆசிரியர்களின் உலகம். இந்த இரண்டிற்கும் இடையில் அவர்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நாட்டின் அரசியலிலும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு சாதராண ஆசிரியரும்…

@Muthuking

Being Mortal - Atul Gawande இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். மருத்துவம் முதுமை மற்றும் இறப்பை பற்றி பேசும் புத்தகம்.அதுல் கவாண்டே ஒரு மருத்துவர். அவரின் அப்பாவின் நோய் பற்றி தெரிந்த பின்பு அவருடைய எண்ணங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் . குணப்படுத்த முடியாத நோய் வந்தால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நோயாளியிடம் அவரின் விருப்பதைக் கேட்கிறோமா மருத்துவர் அதை ஏற்றுக்கொள்வாரா இப்படி பல முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார். ***For human beings, life is meaningful because it…

@Muthuking

Kachchar Kochchar Vivek Shanbhaak Tamil Part - 2 கதைச்சொல்லி படிக்கும் போது எப்படியாவது நல்ல வேலையில் சேரவேண்டுமென்று நினைத்ததும் தான் பணக்காரனாக பிறகு அது அப்படியே தலைகீழாக மாறியதும் தற்கால புது பணக்காரர்களை கண்முன் காட்டுகிறது. மாதம் மாதம் சம்பளம் வரும்போது தான் ஏன் வேலைக்கு செல்லவேணுடுமென்று கூட நினைக்கிறான். அம்மா மருமகளிடம் சமையலை விடுவதாக இல்லை. மகளும் தன் பங்கிற்கு தனது அதிகாரத்தை விடுவதாக இல்லை. அவர்கள் மூவருக்கும் அப்பா வேறுயாருக்காவது சொத்தை எழுதிவிடுவார் என்ற பயம்…

@Muthuking

Being Mortal - Atul Gawande Tamil இறப்பைப் பற்றி பேசுவதே தவறென கருதும் சூழலில் எத்தனை மருத்துவர்கள் இறப்பைப் பற்றி தங்களின் நோயாளிகளுக்கு விவரித்து கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மருத்துவரும் அதை பற்றி பேசுவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு எப்படி நோயை குணப்படுத்த வேண்டுமென்று மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.அதுல் மருத்துவர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார் : ***1.Paternalistic*** - தந்தைப் போல நோயாளி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுபவர். ***2.Informative*** -…

@Muthuking

Kachchar Kochchar Vivek Shanbhaak Part - 1 ***கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.*** இந்தப் புத்தகத்தைப் பற்றி பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம் நூலகத்தில் இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே நாளில் வாசித்து முடித்த சிறிய புத்தகம் . பல முறை கேள்விப்பட்ட கதைதான். ஆனால் அதை வாசிக்கும்போது தற்போதைய குடும்ப கட்டமைப்புகளைப் பற்றி கேள்விகள் எழுந்தது. இது ஒரு கன்னட புத்தகம் . தமிழில் கே நல்லதம்பி…

@Muthuking

Walk Street along the Sea Tamil கடவுள் உன்னை நேசிக்கிறார் வேதாகமம் கூறுகிறது, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” பிரச்சனை என்னவென்றால்… நம் அனைவருமே தீய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது தீய எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இததைத்தான் பாவம் என்று சொல்கிறோம், நம் பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன. வேதாகமம் கூறுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து,…

@Muthuking

Thinam thinam unai nesippen Tamil Story இன்று அலுவலகம் செல்லவில்லை. மகளுக்கு சிங்கப்பூர் பள்ளியில் சேர நடக்கும் நுழைவு தேர்வு இன்று. தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் walkman-ஐ எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். லேசாக வெய்யில் அடித்தது. ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த நுழைவுத்தேர்வுப் பற்றியே எண்ணம். பிள்ளைகள் எக்ஸாம் ஹாலை விட்டு வெளிய வந்தவுடன் பெற்றோர்கள் அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எனக்கு ஏனோ கோபம்.இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அங்கு கேட்டேன். நான் என் மகளிடம்…

@Muthuking

Idli Globalization and Medieval Tamil Traders இந்தப் பதிவு , எனக்கு ஒரு மைல் கல் போல் . ஏனெனில் 'Voice Blogging' (தங்கள் குரல் மூலம் தாம் சொல்ல நினைப்பதை பதிவு செய்வது) இல் இது தான் என்னுடைய கன்னி முயற்சி. இந்தப் பதிவில் தமிழகத்தின் மத்திம கால சரித்திரத்தில் பெரிதும் பேசப்படாத கடல் தாண்டி வாணிபம் செய்த வணிகர்கள் பற்றியும் இட்லி தென் இந்தியாவிற்குள் வந்ததும் அதற்கு எப்படி அவர்கள் ஒரு காரணமாய் அமைந்தார்கள் என்பதற்கான சுவாரசியமான செய்தியையும் பதிவு செய்துள்ளேன் . ஆக இட்லி…

@Muthuking

Grow Knowledge Self learning Tamil நம்முடைய பாவங்களுக்காக மரிக்க கடவுள் தம்முடைய ஒரே குமாரனை அனுப்பினார். இயேசு தேவனுடைய குமாரன். அவர் பாவமற்ற வாழ்வை வாழ்ந்து, நம்முடைய பாவங்களை கழுவும்படி சிலுவையில் அவருடைய உயிரை தியாகம் செய்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” இயேசு மரித்தோரிலிருந்து எழும்பி, இப்பொழுது பரலோகத்தில் பிதாவோடு இருக்கிறார். அவர்கள் நமக்கு நித்திய ஜீவனின் வரத்தை தருகிறார்கள் – நம்முடைய…

@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 2 இசையைப் பற்றிப் பேசுவதென்பது பல தளங்களில் நிகழக் கூடிய ஒன்று. தி.ஜா இசையை பற்றிப் பேசும் முறை ஒரு ஆரம்ப நிலையே. ராகங்களைக் குறிப்பது, ஒரு ஆலாபனையை சிலாகிப்பது, ஸ்ருதி மீட்டலில் திளைப்பதெல்லாம் ஒரு ஆரம்ப நிலை ரசிகனுக்கே உரியது. கர்நாடக சங்கீத விற்பண்ணர்கள் பலரும், ஜாம்பவான்கள் உட்பட, ரசிகர்களும் அந்த நிலையில் தான் இன்று வரை இருக்கிறார்கள். இசையென்பது ஒரு கலை அதற்கு மற்றக் கலைகளின் கூறுகள் உள்ளன, சமகால அரசியலைப் பேசுவது உட்பட, என்பதை…

@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 1 பொது வாழ்வில் ஈடுபட்ட மனிதன் இறந்தாலும் விமர்சனத்திற்குட்பட்டவனே என்று நமக்கு சொல்லிக் கொடுத்தது ஜெயகாந்தன். ஒருவர் மரணமெய்திவிட்டால் ‘அவர் எழுதிய குப்பைகளெல்லாம் குறுக்கத்திப் பூக்களாகிவிடுமா’ என்று இரங்கல் கூட்டத்தில் கேட்டாலும் தவறில்லை என்று அறிவுறுத்தியவர் ஜெயகாந்தன். தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா மற்றும் வரலாற்றில் ஜெயகாந்தனின் இடம் என்ன என்பதை அவர் வழியிலேயே பாரபட்சமில்லாமல் பார்க்கலாமே. **பாரீஸுக்குப் போ** ஜெயகாந்தனின்…

@Muthuking

Great kirikalan Story Tamil திடீரென்று எதிரே வருபவர் தெரிந்தவர் மாதிரி தெரிந்தது. ஆம் தெரிந்தவர்தான். எங்களோடு கைப்பந்து விளையாட வருபவர். ஹலோ சொல்லிவிட்டு ஓடிச்சென்றேன். எண்ணங்கள் அப்படியே கைப்பந்து மேல் சென்றது. பாம்பனில் கைப்பந்து விளையாடுவது ஒரு பெரும் அனுபவம். விளையாடுபவர்கள் அனைவரும் என் உறவினர்கள்தான் ஆனால் அதட்டலும் கெட்ட வார்த்தைகளும் அனல் பறக்கும். அந்த மைதானமே ஒரு திகில் தரக்கூடியது .volleyball court தவிர மற்ற இடங்கள் எல்லாம் மலம் தான். மலத்தில் படாமல் பந்தைப்…

@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 4 **பெண் பாத்திரப் படைப்பும் ஜெயகாந்தனும்** பல ஆண் எழுத்தாளர்களைப் போன்றே ஜெயகாந்தனுக்கும் பெண் கதாபாத்திரங்கள் கைக்கூடுவதில்லை. தன் மேல் முறை தவறிய மோகம் கொண்ட மாமா ‘you can only be a concubine’ என்று அடிக்கடிக் கூறுவதையே வேத வாக்காகக் கொண்டு ஒரு மாலை வேளையில் தன்னை ஆட்கொண்ட படிப்போ பண்போ இல்லாத ஒரு சாதாரணனை தேடிப் பிடித்துக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் கங்கா. படித்த, வேலைப் பார்த்து சம்பாரித்த சுயமாக வாழ்க்கை நடத்தும் கங்கா.…

@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 3 அன்பு, ஆக்கிரமிப்பு, அந்தரங்கம் ஜெயகாந்தனின் கருத்தியலை சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் அது தனி மனித (Individual) சுதந்திரத்தை விதந்தோதுவது தான். அன்பு செலுத்துவது என்கிற பெயரில் நிகழும் ஓர் அற்பத்தனத்தை ‘ஓரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலின் முன்னுரையில் “ஆக்கிரமிப்பு என்பது ஸ்தூல அளவிலானதே என்று புரிந்துக் கொள்வது ஒரு ஆரம்ப அறிவே ஆகும்” என்று விளக்கினார். சமூகத்தில் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்துவதே, குறிப்பாக பெற்றோர்…

@Muthuking

Kamma Karai Oram andhimalail sayum Tamil சரியான வெய்யில் . "Constitution Day"ஞாபகத்தில் வந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் "WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens; JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the…

@Muthuking

Jeyakanthanin Munnuraikal Tamil ஜெயகாந்தனின் முன்னுரைகள் பெர்னார்ட் ஷாவின் முன்னுரைகளைப் போல் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தியானவை. தன்னுடைய முன்னுரைகள் அதிகப் பிரசங்கித்தனங்கள் அல்ல, அவை வாசகனோடு உரையாடுவதற்கு தனக்கொரு வாய்ப்பு என்றொரு முன்னுரையில் கூறியிருப்பார். ஷாவின் முன்னுரைகள் எப்படி ஒரு பிரசார தொனியைக் கொடுத்து இலக்கியத் தன்மையை சிதைக்குமோ அப்படியே அது ஜெயகாந்தனின் முன்னுரைக்கும் பொருந்தும். நேரிடயான பாத்திரப் படைப்புகள் இருக்கும் கதைகளுக்கு முன்னுரை என்ற ஒன்றின்…

@Muthuking

Jeyakanthanin Pirapala Kathaapathurangal Tamil அந்நாவலின் முன்னுரையிலேயே எப்படி அந்தப் பாத்திரம் தன் பாட்டுக்கு பயணித்து ஒரு சோக முடிவில் தன்னைச் செலுத்திக் கொண்டது எனக் கூறி சரயு நதியில் ஜல சமாதியாகும் ராமனை ஒப்புமைக் கூறியிருப்பார். 'பாரீஸுக்கு போ' லட்சியவாதத்தை முன் வைத்தது என்றால் ‘கங்கை எங்கேப் போகிறாள்’ லட்சியமற்றப் பயணம் என்பது முன்னுரையிலேயே வாசகனுக்குத் தெளிவாக கட்டமைக்கப்பட்டிருக்கும். பிராமண **கதாபாத்திரங்கள்** ஜெயகாந்தன் அதிகம் தன் கதைகளை பிராமணக் கதா…

@Muthuking

Cinemavukku pona Jeyakanthan Part 2 திரையிசைப் பாடலாசிரியனை கவிஞன் என்று கூறலாகாது. நண்பனே என்றாலும் கண்ணதாசன் கவிஞர் இல்லை’ என்று சினிமா மோகத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்த சமூகத்தை சாடினார். பீம் சிங்கோடு அவர் உருவாக்கிய இரு திரைப்படங்களும், பின் அவரே இயக்கிய சினிமாவும், அவற்றின் குறைகளைத்தாண்டி, தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்றால் மிகையாகாது. சினிமாவிலும் ஜெயகாந்தன் ஜெயிக்கவே செய்தார். வெற்றியோத் தோல்வியோ அதுப் பற்றிக் கவலைப்படாமல் தன் கலைப் பார்வையை சமரசமில்லாமல்…

@Muthuking

Cinemavukku pona Jeyakanthan சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன் சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து தனக்கும் தன் கலைக்கும் கிஞ்சித்தும் கவுரவம் குறையாமல் மீண்ட கலைஞன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்கக் கூடும். அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ ஒரு ரசமான வாசிப்பனுபவம். சுய எள்ளல், சுய மதிப்பீடுகள், கலை என்பது என்ன, சினிமாவின் வர்த்தக சமரசங்கள் பற்றியெல்லாம் தெளிவான அபிப்பிராயங்கள் கொண்டவர் ஜெயகாந்தன். சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்கள் உற்ற நண்பர்களாக இருந்த…

@Muthuking

Pretty interesting fact about Jeyakanthan Tamil சினிமா கவர்ச்சியைக்கொண்டே ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரை மையமாக வைத்து ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ எழுதினார். அதை அன்று எழுதி வெளியிடுவதற்கு அவருக்கே தைரியமிருந்தது. இன்றும் சினிமா மோகத்தில் தன் ஆன்மாவைத் தொலைத்துவிட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அந்தக் கதை. மிகை நடிப்புக்குப் பெயர்போன மற்றொரு நடிகரை அவரை மேடையில் வைத்துக் கொண்டே சாடினார் ஜெயகாந்தன். அந்நடிகரின் ‘பிள்ளைகள்’ போன்ற ரசிகர்கள் முஷ்டியையுயர்த்த அவர் பதிலுக்கு…

@Muthuking

Jeyakanthanin Ninaivukal Tamil அந்த உரையை சாடுபவர்களும் சரி அதைக் கொண்டாடுபவர்களும் சரி அதிலுள்ள சில வரிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகின்றனர். முதற்கண் ஒன்றை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். இரங்கல் கூட்டத்தில் பேசுவதற்காக கண்ணாதாசன் அழைத்த போது தன்னால் கடுமையான விமர்சனத்தையேக் கூற முடியுமென்று தெளிவாகக் கூறிவிடுகிறார் ஜெயகாந்தன். கண்ணதாசன் ஒப்புக் கொண்டதன் பேரிலேயே தான் பேசச் சென்றதாகப் பின்னர் எழுதினார் ஜெயகாந்தன். ஒரு சங்கடமான உண்மையை ஒரு ஜனத்…

@Muthuking

Jeyakanthanin Trichi Nigalvukal Tamil திருச்சியில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் “ஐவருக்கு ஒருத்தி என்பது என்ன ஒழுக்கம். அது என்ன இதிகாசம். அதைக் கொளுத்துங்கள்” என்றார் ஈ.வே.ரா. சிங்கமென எழுந்தார் ஜெயகாந்தன், “நான் எழுத்தாளன். நான் என்ன எழுத வேண்டுமென்பதை நானே தீர்மானிக்க வேண்டும்” என கர்ஜித்தார். தாலி, ஊழ், ஊரை எரிப்பது என்றெல்லாம் பேசிய சிலப்பதிகாரம் ‘தமிழர் காவியம்’ எனக் கொண்டாடப்பட்டது. கம்ப ராமயாணமோ ‘ஆரிய சூழ்ச்சியாகவும்’ ஆபாசக் குப்பையாகவும் ஏசப்பட்டது, அதை…

@Muthuking

Jeyakandhan Eluthum Pirapala Kathaapathurangal Tamil Part 2 எழுதியிருந்தாலும் ஜெயகாந்தனின் உயிருக்கு உத்தரவாதமிருந்திருக்காது. ஆனால் அதற்காக தேவையேயில்லாத இடங்களிலும் கூட அவர் தன்னிச்சையாக பிராமண வீடுகளையே கதையின் பின்னனியாக வைத்ததும் நடந்தது. சினிமாவுக்குப் போன **ஜெயகாந்தன்** சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து தனக்கும் தன் கலைக்கும் கிஞ்சித்தும் கவுரவம் குறையாமல் மீண்ட கலைஞன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்கக் கூடும். அவருடைய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக…

@Muthuking

Jeyakanthanin Munnuraikal Thoodakkam Tamil ஒருநாள் காலை பத்திரிக்கையில் கண்ட ஒரு பத்து வயதுப் பயனின் சந்நியாசக் கோலம் நமது ஹிந்து சமயவாதிகளின் ஹிருதயமற்ற, உணர்ச்சியற்ற, ஆண்மையற்ற, குறூரச் செயலின் கொடுமை பொறுக்காது என்னை உள்ளூரக் குமுறி அழ வைத்தது. அதன் விளைவு ‘கழுத்தில் விழுந்த மாலை’". இந்த முன்னுரைக்குப் பிறகு வாசகன் எதற்கு அந்தக் கதையைப் படிக்க வேண்டும்? வேடிக்கையென்னவெனில் இந்தக் கதைக்காக அவரை தூஷித்தவர்களும் கொண்டாடியர்வகளும் அவர் ‘ஜய ஜய சங்கர’ எழுதிய போது அப்படியே இடம்…

@Muthuking

Karpanai Kaviyangal Jeyakanthan Tamil அந்த இரங்கல் உரையும் ஜெயகாந்தனின் அரசியலும் நானறிந்த எந்த எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு திறமை ஜெயகாந்தனுக்குண்டு. அவர் சிறந்த பேச்சாளர். ‘கேட்பினும் கேளாத் தகையவே வேட்ப மொழிவதாம் சொல்’ எனும் குறளுக்கு ஜெயகாந்தனைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம். அனல் கக்கும் அவரின் பேச்சுகள் வெறும் உணர்வெழுச்சிகளல்ல. மிக மிகக் கோர்வையாக மையக் கருத்தை நிருவி, அதற்கு தர்க்க ரீதியாக வலு சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு மேடைப் பேச்சிற்கான அனைத்து உயரிய பன்புகளையும்…

@Muthuking

Oru ilakiyavathiyin Kathai Tamil தமிழ் பல்கலைக் கழகத்தின் ராஜராஜன் விருதைப் பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் தன் ஏற்புரையில், "நான் தமிழில் எழுதியதால் என்னை நான்கு கோடிப் பேருக்கு தான் தெரியும், இதையே ஹிந்தியில் எழுதியிருந்தால் என்னை நாற்பது கோடிப் பேருக்குத் தெரிந்திருக்கும், ஆகவே தமிழர்களே ஹிந்திப் படியுங்கள்" என்றார். அவர் அப்படிப் பேசும் போது மேடையில் பல்கலைக் கழக துணை வேந்தரும் அன்றைய ஆட்சியில் இரண்டாமவராக இருந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் அமர்ந்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை…

@Muthuking

Jeyakanthanin Munnuraikal Thoodakkam part 3 ஜெயகாந்தன் இறந்துவிட்டார் என்றவுடன் இணையம் மற்றும் ஊடகங்களில் குறிப்புகள் குவிய தொடங்கிய போது இரண்டு வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன, அவை ‘சிங்கம்’, ‘ஆளுமை’. ஓரு இலக்கியவாதியை சிங்கமென்றும் ஆளுமையென்றும் விளிப்பது அரிது மட்டுமல்ல ஒரு வகையில் அச்சொற்கள் அவரின் இலக்கிய தரத்தை குறைத்து மதிப்பிடுபவர்களின் வாய்க்கு அவலானது. வயிற்றெரிச்சலில் ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இருந்தது பிம்பம் என்றும் அது ஊடகங்கள் கட்டமைத்தது என்றும்…

@Muthuking

Jeyakanthanin marumalarchikal தி.மு.க எத்தகைய இயக்கமாக செயல்பட்டது, அது எப்படி ஒரு ஜனத்திரளைக் கவர்ந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது என்பது குறித்தும் அறிமுகமாவது செய்துக் கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஜெயகாந்தனின் உரையின் தேவையை உணர்த்தும். பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராவின் தலைமையிலான திராவிடர் கழகமும் அதன் பின் அதிலிருந்து பிரிந்து அண்ணாத்துரையின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தங்களை ஒரு அரசியல் மாற்றத்தை உண்டுப் பண்ணுகிற இயக்கங்களாக மட்டும் முன்னிறுத்திக்…

@Muthuking

Kummelavum magamamum Tamil கும்ப மேளாவும், மகாமகமும் காலராவும்: இறந்துப் போன கோடாக்கோடியும். பிளேக் நோய், திலகர், ஒரு கொலை பாதகம் டில்லி நிஜாமுதீன் இஸ்லாமிய விழாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து மருத்துவம் பார்க்காமல் ஓரிடத்தில் அடைத்து வைத்து சாக விட்டு விட வேண்டும் என்று இந்துத்துவர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். கருனைகளுள் மானுட அளவிலான கருணை, தெய்வாம்சமான கருணை என்று இரு வகைகளை பாரதி குறிப்பிடுகிறான். பின்னது தனக்கு கெடுதல் செய்வோருக்கும் நன்மைப்…

@Muthuking

Kummelavum magamamum Tamil 4 2018-இல் வெளியான் ஓர் ஆய்வறிக்கைச் சொல்கிறது, 2015-இல் நடந்த கும்ப மேளாவின் விளைவால் கோதாவரி நதியின் பாக்டீரியா தொகுப்பின் வகைமை மாறியதாம், மேலும் மருந்து எதிர்ப்பு சக்திக் கொண்ட சூப்பர் நுண்கிருமிகள் (super bugs) உண்டானவாம். அது மட்டுமல்ல இயற்கையாக நதிகளில் தோன்றும் பாக்ட்டீரியாக்களை விட மனித முகம், கைகள், மலம் ஆகியவற்றில் தோன்றும் பாக்ட்டீரியாக்கள் மிகுந்தனவாம். சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பாளர்களுக்கும் பிரத்யேக சவால்…

@Muthuking

Kumbamela samyathil kalara Tamil 2 அப்போதிருந்த மக்கட் தொகையில் இது மிகப் பெரிய விழுக்காடு. கும்ப மேளாக்களினால் உருவான காலரா பல வருடங்களில் பல இந்தியர்களை, எல்லா மதத்திலும், காவு வாங்கியிருக்கிறது. இதில் கும்ப மேளாக்களின் போது நடக்கும் கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களை சேர்க்கவில்லை. அது தனி கணக்கு. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே ஆங்கிலேய அரசு இந்து மத விழாக்களின் போது காலரா பரவுவதை தடுக்க நடவிக்கைகள் எடுத்தன. இன்றைய இந்துத்துவ வெறியர்களைப் போல் அவர்கள் நடக்கவில்லை. 1912-இல்…

@Muthuking

Kumbamela samyathil kalara Tamil 5 என்று விடாததற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி கொடுத்த விலை அவரது உயிர். சந்திரசூட் அக்கட்டுரையில் வைக்கும் முக்கியமான கருத்து அரசு நோயைக் கட்டுப்படுத்த அத்துமீறிய அடுக்கு முறையை ஏவுவது தவறு என்பதே. ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் முதல் அநேக ஆயுர்வேத (இந்திய அறிதல் முறை மருத்துவம்) ஆகியவற்றால் தவறான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்களைப் பற்றி ஆய்வு நடத்த வேண்டிய நிலையில் என்னமோ தாங்கள் மாத்திரம் ஐன்ஸ்டீனின் பேரப் பிள்ளைகள் மாதிரியும் இஸ்லாமியர் மூட…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil 1 என் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம் பாரதிக்கு இன்று வரை முறையான வாழ்க்கைச் சரித்திரம் கிடையாது. மாறாக நினைவுக் குறிப்புகள் என்று கூறத் தக்கவை தான் அதிகம். அவற்றுள் நூல் வடிவில் வெளிவந்தவைகளில் மிகுந்த கவனம் பெற்றவை, முறையே, வ.ரா வின் 'மகாகவி பாரதியார்', யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’ மற்றும் செல்லம்மாள் பாரதியின் நூல். ரா.கனகலிங்கத்தின் ‘என் குருநாதர் பாரதியார்’ பிரசித்திப் பெற்ற அளவுக்குப் அங்கீகரிக்கப்படவில்லை என்றேத் தோன்றுகிறது.…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil 4 பாரதியை விட 7-8 வயது இளையவர். பாரதி பிறந்தது டிசம்பர் 11 1882). பள்ளிக் காலத்தில் தோழர் ஒருவர் மூலம் ‘இந்தியா’ பத்திரிக்கை கிடைக்கப் பெற்று அதன் மூலம் பாரதி பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. கனகலிங்கத்தின் கல்வி மற்றும் அறிவுத் தேடலுக்கு இது ஒரு சான்று. 1912-இல் Progressive Union Cricket Club என்கிற அமைப்பின் சார்பில் கனகலிங்கமும் வேறு மூன்று நண்பர்களும் பாரதியை உரையாற்ற அழைக்கிறார்கள். கவனிக்கவும், கனகலிங்கம் எம்மாதிரியான கிளப் ஒன்றில்…

@Muthuking

Kummelavum magamamum Tamil 2 நேற்று முதல் எல்லா இந்துத்துவர்களும் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் "ஐயகோ பார்த்தீரா இந்த முஸ்லீம்களை" என்று. எத்தனையோ ஊர்களில் ஊரடங்கு உத்தரவை குப்பையில் போட்டிருக்கிறார்கள். காணொளிகள் கிடைக்கின்றன. இந்திய முஸ்லிம்கள் இந்தியர்கள் தானே? இந்தியர்கள் எப்படிப் பொதுவில் "நீ என்னச் சொல்வது நான் என்ன கேட்பது" என்று இயங்குவார்களோ அப்படித்த்தானே அவர்களும். சினிமா தியேட்டரில் கூட வரிசையில் நின்று டிக்கட் வாங்கத் தெரியாத சமூகத்தில் வேறென்ன…

@Muthuking

Kumbamela samyathil kalara Tamil 6 சென்ற வருடம் கிட்டத்தட்ட ரூ.4200 கோடி செலவழித்து மிக, மிக பிரம்மாண்டமாகவும், சுத்தமாகவும் கும்ப மேளா நடத்தப்பட்டது. ஆங்கிலேய அரசு காப்பாற்றிக் கொடுத்த மேளா தான் இன்று விசுவரூபமெடுத்து இருக்கிறது. இது தான் ஒரு சமூகம் செய்யக் கூடியதும், செய்ய வேண்டியதும். ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு மக்கள்பால் எழுந்த அதிருப்தி பற்றியும், முக்கியம பால கங்காதர திலகரால் தூண்டப்பட்ட மருத்துவர்களை கொன்ற சாப்பேக்கர் சகோதரர்கள் பற்றியும் அருமையான…

@Muthuking

Kumbamela samyathil kalara Tamil 3 உச்ச நீதிமன்ற வக்கீலும் எழுத்தாளருமான அபினவ் சந்திரசூட் பிளேக் நோயின் போது ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு மக்கள்பால் எழுந்த அதிருப்தி பற்றியும், முக்கியம பால கங்காதர திலகரால் தூண்டப்பட்ட மருத்துவர்களை கொன்ற சாப்பேக்கர் சகோதரர்கள் பற்றியும் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். 1896-இல் மும்பையில் பிளேக் நுழைந்தது. நோய் பீடித்த 80 சதவீதத்தினர் செத்து மடிந்தனர். ஆங்கிலேய அரசு நோயைச் சமாளிக்க ஒரு சட்டத்தை அமல் செய்தது. அச்சட்டத்தின் படி…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil 2 பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர், ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூலைப் படைத்தவர்". கட்டுரை கனகலிங்கம் பற்றிக் கிடைத்த புதியதோர் தகவல் பற்றியது. அதற்கான முதல் வரிகள் தான் அவை. கனகலிங்கம் என்கிற நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் முகமாக, சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் என்றெல்லாம் சொல்லிவிட்டு தான் அவர் எழுதிய நூலே குறிப்பிடப்படுகிறது. வ.ரா எழுதிய “மகாகவி பாரதியார்” நூலுக்கும் இப்படி ஓர் அறிமுகம்…

@Muthuking

Kumbamela samyathil kalara Tamil கும்ப மேளா சமயத்தில் காலரா எல்லா தடவையும் உருவாவதில்லை என்பதையும் சுட்டி அதற்கான விளக்கத்தையும் ஹெர்பர்ட் அளித்தார். முடிவாக அவர் கும்பல் கூடுவதால் அழுக்கான நீர், நீரின் அளவு, தட்ப வெப்பம், ஹரித்துவார் தாண்டி காலரா பரவும் போது அந்தந்த உள்ளூர் வகைமை இன்னும் வலுவுடைய காலராவாக மாற வாய்ப்புகள் உண்டு என்று தெரிவிக்கிறார். காலரா உலகளாவிய பரவலாக்கத்தில் (Pandemic) முக்கிய வருடம் 1899. ஹரித்துவார் கும்ப மேளாவில் உருவான காலரா பஞ்சாபை அடைந்தது. அதன்…

@Muthuking

Kumbamela samyathil kalara Tamil 4 வேறு இரண்டு பேருக்கு (பிராமணர்களா என்று தெரியவில்லை ஆனால் உயர் ஜாதியினர்) உடனே மூக்கில் வேர்த்தது. சாப்பேக்கர் சகோதரர்கள் என்று இன்று அடையாளப்படுத்தும் இருவர் பிளேக் நோயை கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகளை சுட்டுக் கொன்றார்கள். அந்த சாபேக்கர்களுக்கு பிந்நாளைய இந்திய அரசு ஸ்டாம்பு வெளியிட்டு கவுரவம் செய்தது. இந்தியர்கள் விந்தையானவர்கள். மகாமகத்தை காப்பாற்றிய கே.டி.மேத்யூ பற்றி ஒரு செய்தியும் கண்டறிய முடியவில்லை ஆனால் சாப்பேக்கர் சகோதரகள் பற்றி…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil Part 5 குவளைக்கண்ணனும் கனகலிங்கமும் கனகலிங்கத்தோடு கல்வே பள்ளியில படித்த இன்னொருவர் குவளைக்கண்ணன் என்று அறியப்படுகின்ற கிருஷ்ணமாச்சார்யார். ‘எனது நண்பர் குவளைக்கண்ணன்’ என்று கனலிங்கம் குறிப்பிடுகிறார். பள்ளிக் கால நட்பைக் குறிப்பிடுகிறாரா இல்லை பின்னால் பாரதியின் மூலம் நண்பரானதை குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. இதில் இருந்து நமக்குத் தெரிவது கனகலிங்கம் படித்தவர் என்பதோடு பிராமணர்கள் பயின்ற பள்ளியிலேயே பயின்றார் என்பது. அப்பள்ளியில் பயின்ற…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil 3 கனகலிங்கத்தின் கல்வியும் பாரதியின் அறிமுகமும் கனகலிங்கத்தின் நூலுக்கு எஸ். வையாபுரிபிள்ளையும், பி.ஶ்ரீ. ஆசார்யாவும் எழுதிய முன்னுரைகளின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்நூல் 1947-இல் வெளி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நூல் பாரதியைப் பற்றி மட்டுமல்ல அக்காலச் சாதியம் பற்றியும் தகவல்களை அளிக்கிறது. எழுத்து நடையும் அபாரம். கனகலிங்கத்துக்குப் பாரதி பூணூல் மாட்டி விட்டார் என்கிற கதையில் மறக்கப்பட்ட (அல்லது மறைக்கப்பட்ட உண்மை)…

@Muthuking

Magamamum Tamil Pulamayum 1891-இல் நடந்த கும்ப மேளாவில் காலரா பரவி இறந்தோர் எண்ணிக்கை 724,384. 1895-இல் காப்டன் ஹெர்பர்ட் "The Natural History of Hardware Fair Cholera Outbreaks" என்று ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அற்புதமான ஆய்வறிக்கை (சுட்டியை ரெபெரன்ஸ் பகுதியில் கான்க). சுற்றுச் சூழல் தண்ணீரில் இருந்து சாம்பிள் எடுத்து ஆய்வு, மேளாவுக்கு வந்தவர்கள் கணக்கு, ஹரித்வாரில் கங்கையின் நீரளவு (1881-1894 வரை ஒவ்வொரு ஆண்டும்), படித்துறைகள் பற்றிய குறிப்புகள்,…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil Part 7 கனகலிங்கத்துக்குப் பூணூல்: இரு பார்வைகள் கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய நிகழ்வை பூணூலை கழற்றினாலும் பிராமணராகவே இருந்து பதிவுச் செய்கிறார் வ.ரா. வ.ராவின் பார்வையில் அது ஒரு கேலிக்குரிய நிகழ்வு. “உன் ஜாதி என்ன என்று யாராவது கேட்டால் பிராமணன் என்று சொல்” எனப் பாரதி முழங்கும் போது அந்த வைபவத்துக்காகப் பாறதி அழைத்திருந்த பிராமண நண்பர்கள் யாரேனும் நகைக்கிறார்களா என்று நோட்டம் விட்டதாக வ.ரா எழுதுகிறார். கனகலிங்கத்தைக் குறிக்கும் போது…

@Muthuking

En gurunathar Bharathiar Tamil Part 6 கனகலிங்கம். புதுவை நீதிமன்றங்களில் சாட்சி சொல்வோர் ஏற்க வேண்டிய சத்திய பிரமாணம் சாதி, மத ரீதியாக வேறுப்பட்டிருந்ததாம். இஸ்லாமியருக்கு முஸ்லிம் ஒருவர் குர்-ஆன் புத்தகம் கொண்டும், பிராமணரல்லாதோருக்கு ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும், “ஹரிஜன சமூகத்தாருக்கு வள்ளூவப் பண்டாரம் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும்” சத்திய பிரமானம் செய்விப்பார்களாம். புதுவையில் பாரதி இருந்த காலத்தில் தேர்தல்கள் அமளிப்பட்டன என்று கனகலிங்கமும்,…

@Muthuking

Gurunathar Bharathiya Tamil கனகலிங்கம் சில காலமாகப் பாரதி தனக்கு வேத மந்திரங்கள் கற்றுக் கொடுத்துப் பின்னர் ஒரு நாள் உபநயணம் செய்விப்பதாகச் சொல்லி வீட்டுக்கு அழைத்ததையும், அங்கிருந்த பாரதியின் நண்பர்களையும் நினைவுக் கூர்கிறார். பாரதியின் வீடு வைபவத்திற்குத் தயார் செய்யப்பட்டிருந்தது. “கூடத்தில் லட்சுமி, ஸரஸ்வதி, கிருஷ்ணன்” ஆகியவரின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் இருந்தன என்றும் கிருஷ்ணனின் படத்துக்கு அடியில் “பிச்சுவா” கத்தி இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இக்குறிப்புகள்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 5 தீண்டாமைப்பிணி இருக்கவே இருக்க முடியாது” என்று சூளுரைச் செய்கிறான். தேசிய கீதங்களை ஏன் கும்மி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து வகையில் மெட்டமைத்தார் என்ற கேள்விக்கு “என் பாட்டு தேசிய கீதமானதால், மூட்டை தூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் சுலபமாகப் பாடவேணும்” என்று பதில் சொல்கிறான். வ.ரா போன்றவர்களின் பாரதி பற்றிய பார்வைக்கும் கனகலிங்கத்தின் பார்வைக்குன் இங்குத் தான் வித்தியாசம் காண முடிகிறது. மீண்டும் மீண்டும் கனகலிங்கம் சேர்ந்துண்பது,…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 6 தன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு வரவழைத்துச் சாப்பிட்ட பாரதி பற்றிச் சொல்லிவிட்டுப் பின் வருமாறு எழுதுகிறார்: “என் குருநாதர் பாரதியார் ஹரிஜங்களின் சுகதுக்கத்தைத் தமதாக்கிக் கொண்டார். இத்தகைய வாழ்க்கையில் பிறந்தது தான், தஞ்சம் உலகினில் எங்கணுமின்றித் தவித்துத் தடுமாறி பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன் பாரமுனக்காண்டே! ஆண்டே! பாரமுனக்காண்டே’” முதலாம் உலகப்போரின் சமயம் கனகலிங்கமும் பாரதியும் பிரிந்து விடுகிறார்கள். கனகலிங்கம் குமாஸ்தா…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 8 வேடிக்கையாக’. இல்லை ஏதாவது சொல்லுங்கள் என்று அழுத்திக் கேட்டதற்குப் பாரதி தனக்கு “திராவிடர், ஆதி திராவிடர், ஆரியர், என்ற வேற்றுமையும் பிடிக்காது; எல்லா மக்களும்” சமம் என்று சொல்லச் சொல்கிறார். பாரதி பற்றிய சொற்சித்திரமும் கனகலிங்கமும் பாரதி பற்றித் தகவல்கள் மூலம் ஒரு சித்திரத்தை கனகலிங்கம் அளிக்கிறார். பாரதி கொடுமையான வறுமையை அனுபவித்த காலங்கள் அவை. எழுதுவதற்குக் காகிதம் வாங்க தன்னிடம் உள்ள பழைய செய்தி தாள்களை விற்றுக் காகிதம் வாங்குவாராம்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil End கனகலிங்கத்தின் நூல் முக்கியமான வாசக அனுபவம். எளிமையான அதே சமயம் செறிவான எழுத்து நடை. பாசாங்கில்லாத நடை. நிச்சயமாக யதுகிரியின் நூலோடு சேர்ந்துப் படிக்க வேண்டிய நூல். அதற்கு மேலாகப் பொதுப் புரிதலில் கனகலிங்கத்தின் ஜாதியை வைத்து அவரைப் பற்றி இருக்கும் பிம்பத்தையும் திருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்த நூல் வெளியீட்டாளர்களே ஏனோ வெற்றுடம்போடு இருக்கும் கனகலிங்கத்தின் புகைப்படத்தைத் தான் அட்டையில் பதிப்பித்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் அவர்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 2 உப்பளம் மாரியம்மனும் பாரதியும் பாரதியின் “தேடி உனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” பாடலின் பூர்வீகம் சுவாரசியம். புதுவையில் உப்பளம் தேச முத்து மாரி அம்மன் கோயில் ஹரிஜனங்களுக்கான கோயில் அங்கிருந்த பூசாரி நாகலிங்கம் என்னும் வள்ளுவப் பண்டாரம். அவருக்கும் பாரதி பூணூல் அணிவித்தார், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க. ஆரம்பக் காலத்தில் அப்பாடல் “உப்பளம் தேச முத்துமாரி” என்ற தலைப்பில் தான் வெளியானதென்றும் பிற்காலத்தில் ஏனோ வெறுமே ‘தேச முத்துமாரி’ என்றும்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil Part 7 தலித் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் சமீபத்தில் பாரதியும் அயோத்திதாசரும் ஏன் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஏதும் குறிப்பிடவில்லை என்று வியந்து எழுதியது குறிப்பிடத் தக்கது. பாரதியை கனகலிங்கம் கண்டு பிடித்து விடுகிறார். சில சந்திப்புகளுக்குப் பிறகு கனகலிங்கம் தன் நண்பர் சார்பில் பாரதியிடம் “எங்கள் சமூகத்தாரை திராவிடர் என்று அழைப்பதா, ஆதிதிராவிடர் என்றழைப்பதா” என வினவுகிறார். பாரதி அதற்கு, “அடேய் எனக்கு ஜாதியும் கிடையாது, சுண்டைக்காயும்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 4 தன் பெண்ணைக் கனகலிங்கம் கைப்பிடித்து அழத்துச் செல்ல அனுமதிப்பான், தன் வீட்டில் சாப்பிட்ட பிரஞ்சுக்காரரை காபி கோப்பையைத் தூக்கி அருந்தாமல் வாயில் வைத்து பருகச் சொல்வான், எல்லோரும் சாப்பிட்ட இலையைச் செல்லம்மாளை அப்புறப் படுத்த சொல்வான், ஒரு நாள் திடீரென்று கனகலிங்கம் வீட்டுக்கே போய் உட்கார்ந்து கொண்டு செல்லம்மாளை அழைத்து வர முயல்வான், இன்னும், இன்னும் இன்னும். ஒரு பிராமணரின் வீட்டில் அமர்ந்து கொண்டு கனகலிங்கத்தை அழைப்பான், கனகலிங்கம் உள்ளே வரத்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 9 பாரதி சிறுவனாக இருந்த போதே தன்னைச் சிறுமைப்படுத்த நினைத்த வயதில் மூத்த புலவரான காந்திமதிநாதனை தன் கவிதையில் மூக்குடைத்த கதை பிரபலம். ஆனால் அப்போதே பாரதி இன்னொரு கவிதையையும் சொல்லி தான் என்ன இருந்தாலும் சிறுவனே என்று காந்திமதிநாதனுக்கு வணக்கம் தெரிவித்ததை இன்று பலரும் மாறந்து விடுகிறார்கள். பாரதி சிறூ வயது முதலே பெருந்தன்மை மிக்கவன். அதனால் தான் ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பட்டு எழுதியதோடு நம்மை வருத்துகிறவர்கள் பால் அன்புச் செய்வதே…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 10 புதுவைத் தேர்தல் காலத்தில் தோட்டி இனத்தைச் சேர்ந்த தம்பலா என்றழைக்கப்பட்ட தலைவர் ஒருவர் அதிகம் அச்சமூட்டியவர். அவர் வீடு தேடிப் போய்ப் பாரதி இரண்டு வார்த்தைகள் பேசுகிறான். “யாரையும் ஒதுக்குதல் கூடாது. முரடராயிருந்தாலும். பேசினால் தான் அவர்களை நம் பக்கம் இழுக்க முடியும்” என்று கனகலிங்கத்துக்குப் பயிற்றுவிக்கிறான். பாரதியினால் உந்தப்பட்ட கனகலிங்கம் சுதேசமித்திரனுக்குச் சாதிய பிரச்சனைக் குறித்து எழுதிய கடிதம் ஒன்று சமீபத்தில்…

@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 3 அந்தப் பாடல் பற்றி எழுதிய கனகலிங்கம் பாரதி ஜாதி வித்தியாசங்கள் தலைவிரித்தாடிய சிவன், விஷ்ணு, மற்ற தெய்வங்களின் கோயில்கள் பற்றிப் பாடல் எழுத்த மறுத்துத் தங்கள் அம்மனை பற்றிச் சிறப்பாகப் பாடினார் என்கிறார். பாரதியும் சமத்துவமும் பாரதி தீவிர இந்து தான். “ஆரிய பூமி” என்றெல்லாம் பாட்டெழுதியவன் தான் ஆனால் அதுமட்டுமா பாரதி என்றால் இல்லவே இல்லை என்கிறார் கனகலிங்கம். புதுவை சர்ச்சில் ஈஸ்டர் பண்டிகைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வான் பாரதி, இஸ்லாமியர்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil ஓர் இந்துத்துவருக்கான பதில்கள்: இஸ்லாம், கிறிஸ்தவம், மத மாற்றம் முகநூலில் ஓர் இந்துத்துவர் இஸ்லாம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் கேள்வி எழுப்பிய போது சிறு குறிப்புகளாக எழுதிய பதில்கள் இவை. இப்பதிவு என் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டது. மேற்கோள்கள் இன்றி, புத்தகப் பட்டியல் இன்றி எழுதப்பட்டது. இங்கிருக்கும் எதுவும் அடிப்படையில்லாமல் எழுதப்பட்டதல்ல. வேறொரு சமயம் நூல் பட்டியலை இங்கேயே வெளியிடுகிறேன் முதலில் இஸ்லாம் பற்றியும் அதைத்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 3 தமிழர்கள் பலர் அந்த இயக்கத்துக்காக கருத்தியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் (இதில் மோசடிகளும் அடங்கும்) உதவியவர்கள். அடுத்தது சீக்கியர்கள். இந்திய இறையாண்மையை கிட்டத்தட்ட தகர்த்தவர்கள் சீக்கிய தீவிரவாதிகள். மேலும் வெளிநாட்டிலும் போய் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் மேற்கொண்டு ஒரு விமானத்தையே வெடிக்கச் செய்தவர்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல இடங்களிலும், தமிழகம் உட்பட, பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன.அவற்றில்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 4 அது ஏன் இஸ்லாமியர் என்றவுடன் பயங்கரவாதத்தோடு பிணைத்துப் பேசுகிறார்கள்? ஐசிஸ், அல் கொய்தா எல்லாம் அந்தந்த தேசத்தில் தோன்றியதற்கு பல காரணங்களுண்டு. முக்கியமாக அந்தந்த இஸ்லாமிய தேசங்கள் உலக அரங்கில் பகடைக் காயாக ஆக்கப்பட்டது. அக்காரணங்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இன்று இந்தியாவில் அந்த பயங்கரவாத இயக்கங்களில் ஊடக பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமியர் இருக்கிறார்கள், சொற்பமாகவேனும். ஆனால் இன்று அவர்களால் இந்திய…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 2 ஓர் இந்துத்துவ மோடி வாக்காளர் (இரண்டும் வெவ்வேறல்ல என்பதும் முக்கியம்) குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒட்டி சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அவர் பிராமணர். ஆனால் என் பதில்கள் பிராமணர்களை மட்டுமே முன்னிறுத்தி சொல்லாமல் அவர்களுக்கும் பிறருக்குமாகவும், தேவையான இடங்களில் பிரத்யேகமாக பிராமணர்களுக்கு சொல்கிறேன். ஸ்லாமியர் என்றவுடனேயே ஐசிஸ், அல் கொய்தா என்று நாடு கடந்த பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் பயங்கரமான…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 7 ஓர் இந்துத்துவருக்கான பதில்கள் - பகுதி இரண்டு: கிறிஸ்தவம், மத மாற்றம்., பெந்தகோஸ்தே வளர்ச்சி இஸ்லாமியர் என்றால் பயங்கரவாதம் தொடர்பாக பேச அரம்பிப்பதைப் போல் கிறிஸ்தவர் என்றாலே மத மாற்றம் குறித்து ஆரம்பிப்பார்கள் இந்துத்துவர்கள். அதுவும் மென்மையாக ஆரம்பிப்பார்கள், “கல்விக்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பை மதிக்கிறேன்” என்று சொல்லி அப்புறம் ‘ஆனால்’ என்று இழுப்பார்கள். மத மாற்றத்தைக் கூட ஒப்புக் கொள்வார்கள், “அது தனி மனித தேடல் என்றால் ஓகே ஆனால்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 10 பெந்தகோஸ்தே வளர்ச்சியை ஏதோ பன்னாட்டு சதி ரேஞ்சில் பேசுகிறார்கள். ஜோஷுவா புரோஜெக்ட் போன்ற அரை வேக்காடு அறிக்கைகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. யதார்த்தம் வேறு என்கிறார் நண்பர் ஒருவர். பல ஊர்களில் இந்த பெந்தகோஸ்தே வகையறா பாதிரிமார்கள் தீடீர் சர்ச்சுகளை ஏற்படுத்தவும் அவர்களுக்கும் உள்ளூர் இந்து அமைப்புகளின் தலைவர்கள் அந்த சர்ச்சுகள் அங்கு ஸ்தாபிக்கப்பட தடை உருவாக்காமல் இருப்பதற்காக கப்பம் வசூலிப்பதும் நடக்கிறது என்கிறார். இம்மாதிரி சர்ச்சுகள்…

@Muthuking

Oru Mainavin Kathai Tamil 4 இஸ்லாம், இந்து மதம் போலல்லாது ஆள்பவரின் ஆதரவு பெருமளவு இல்லாமல் என்பதோடு ஆள்பவரின் எதிர்ப்பையும் மீறி வளர்ந்தது தான் கிறிஸ்தவம். காலனி ஆட்சிக்கும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறதா? ஏன் தலித்துகள் பெருமளவில் கிறிஸ்தவர்களானார்கள்? கிறிஸ்தவத்தில் ஏன் சாதி இன்றும் இருக்கிறது? பதில்கள் தொடரும் ஓர் இந்துத்துவருக்கான பதில்கள் - பகுதி மூன்று: மத மாற்றத்தின் தேவைகளும், பலன்களும், அரசியலும் மெக்காலேவினால் இந்தியாவில் கல்வி தழைத்தது. ஐடா…

@Muthuking

Oru Mainavin Kathai Tamil 2 சாதி, மதம் சார்ந்த எள்ளல்களும், விலக்கல்களும் இந்திய மண்ணில் ஊறிய பண்புகள். “சிச்சீ என்ன இது மத மாற்றம்” என்பவர்கள் எல்லாம் மானுடத்தை வித்தியாசம் பார்க்காமல் அலைகடலென அணைத்துக் கொள்ளும் மகாத்மாக்கள் அல்ல. பிராமண நண்பன் வீட்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குச் சென்றவன் நண்பன் வீட்டில் தன் மட்டையை மறந்துவிட்டது நினைவுக்கு வரவும் நண்பன் வீட்டுக்குப் போனான். போனவன் கண்டது நண்பனின் பாட்டி அவர்கள் விளையாடிய இடத்தை நீர் விட்டு அலம்பிக்…

@Muthuking

Oru Mainavin Kathai Tamil பெண் ஐயரை மணந்தால் என்று அவள் வீட்டில் சாப்பிடாத ஐயங்கார் அம்மாளை விட ‘மதம் மாறு பெண்ணை கட்டிக் கொடுக்கிறேன்’ என்கிறவர் கொஞ்சமேனும் மேலானவர். ‘நீ கொலம்பியாவில் முனைவர் பட்டம் வாங்கினாலும் என் கையால் உனக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன்’ என்பவரை விட இறக்கும் தொழுநோயாளிக்கு சிசுருஷை செய்து, மருத்துவம் பார்த்து அந்நோயாளி சாவின் வாயிலில் நிற்கும் போது ஞானஸ்நானம் செய்பவரின் அநாகரீகம் சற்றேக் குறைவானது. இந்த இரு உதாரணங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான…

@Muthuking

Oru Mainavin Kathai Tamil 5 இந்து மதம் செய்திருந்தால் கிறிஸ்தவத்திற்கு இந்தியாவில் நுழைவாயில் அடைப்பட்டிருக்கும். அநேகரும் மத மாற்றத்தை கிறிஸ்தவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்க்கிறார்கள். காலனி ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றியதால் மிக அற்புதமான ஆவண களஞ்சியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நானும் அந்த வரலாற்றையே பெருமளவு படித்ததால் கிறிஸ்தவ மத மாற்றம் குறித்தே எழுதுகிறேன். மத மாற்றம் என்ற தலைப்பில் தமிழில் சரியான நூல்கள் இல்லை, ஆங்கிலத்திலும் பல நூல்களில் இருந்து…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 6 மாத்வர் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர் எழுதுகிறார், “இன்றளவும் அந்தண , அர்ச்சக விரோதத்தை வளர்ப்பது யார்?” இதை தமிழ் நாட்டில் செய்வது திராவிட இயக்க இந்துக்கள் தாமே? அதைச் சொல்ல என்ன வெட்கம்? அதே மாத்வர் கேட்கிறார், “சாதியின் பெயரைச் சொல்லி ஹிந்து மதத்தவர் இடையே கலவரத்தை தூண்டி விட்டது யார்?”. அதாவது அதைச் செய்வது இஸ்லாமியராம். வெட்கமாயில்லை இப்படி பொய் சொல்வதற்கு? எத்தனை சாதிய கலவரங்களுக்கு இஸ்லாமியர் பொறுப்பு? சாதிய கலவரம் செய்ய…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 4 கலாச்சாரம், பண்பாட்டு அடையாளம் என்ற போர்வையில் இந்தியாவின் உயரிய அரசாங்க விருதுகளின் பெயர்கள் துரோணாச்சார்யார், அர்ஜுனன் ஆகியவை. மருந்துக்குக் கூட இந்தியாவில் ஆயிரம் வருடத்துக்கு மேல் வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய அடையாளம் இல்லை எங்கும். குழந்தை திருமணத்தை தடுக்கவும், விதவைகள் மறுமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கும் இந்து மடாதிபதிகளிடம் எவ்வளவு சாஸ்திர ரீதியாக மன்றாட வேண்டியிருந்தது என்பது வரலாற்றைப் புரட்டினால் தெரியும். தீண்டாமைக்கு…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 8 ஃபிரைக்கன்பர்க் எடிட் செய்த கிறிஸ்தவ வரலாறு பற்றிய நூல்களும், சூசன் பேலி, ரூபா விஸ்வநாத் முதலானோர் எழுதிய நூல்களை கொண்டே 150 பக்கம் வரை சுருக்கமாக கிறிஸ்தவ வரலாற்றை தொகுக்கலாம் அது பல புரிதல்களை கேள்விக்குள்ளாக்கும். அதி தீவிர இந்துத்துவர்கள் முதல் சாதரணர்கள் வரை இந்த மத மாற்றம் குறித்து பல விதமான புரிதல்கள் இருக்கின்றன. அதில் நியாயமான எரிச்சல்கள் முதல் அடிப்படையே இல்லாத காழ்ப்புகள் வரை அடங்கும். மத மாற்றம் என்பது பற்றி நல்ல ஆராய்ச்சிகள்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 5 சிறு பெண் குழந்தைகள் கத்தி ஏந்தி ஊர்வலம் போவதை இந்துத்துவர் மகிழ்ச்சியோடு பகிர்கிறார். பயங்கரவாதம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வித்தியாசம் என்பது ஒரு சாரார் செய்தால் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் இன்னொரு சாராருக்கு அரசாங்கமே காவல் நிற்கும். இஸ்லாமியர் ஷரியா சட்டத்தையே விரும்புவார்கள் இந்திய அரசியல் சாசனத்தை அல்ல என்கிறார் இந்துத்துவர். இந்துத்துவர்களிடையே தான் இன்று “தர்ம சாஸ்திர” அடிப்படையிலான அரசியல் சாசனம் வேண்டும் என்ற…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 6 செய்த நேரத்தில் தான் சராசரி ஹிந்து தனது தவறுகளை குறித்து வெயிலில் காய்ந்தவாறு நின்று யோசித்தான்” என்று நக்கலாக எழுதுகிறார். கொடுமை. நெல்லி படுகொலை முதல் குஜராத் படுகொலைகள் வரை இஸ்லாமியர் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் விசாரணை கமிஷன்கள் கேட்பாரற்று போயின. ஹாஷிம்புராவில் இஸ்லாமியரை குருவி சுடுவது மாதிரி சுட்டு வீசினார்கள். 31 வருடங்களாக சுட்டுத் தள்ளிய போலீஸார் மீது வழக்கு நடக்கிறது. அதற்குள்ளாக இதோ உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியரை போலீஸ்…

@Muthuking

Oru Mainavin Kathai Tamil 3 சராசரி இந்து அன்றாட வாழ்வில் எல்லோரையும் என்ன மாதிரி இந்து என்று உரசிப் பார்ப்பதில்லை. ஆனால் உரசிப் பார்க்கும் தருணங்களை இந்துக்கள், எல்லா வகையினரும், தெளிவாகவே கடைப் பிடிக்கிறார்கள். காந்தி முதல் ஜெயகாந்தன் (‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’) வரை மத மாற்றங்கள் புரிந்துக் கொள்ளப்படவில்லை என்பதே நிஜம். மதம் மாறுகிற தலித்துகளை மாடுகளோடு ஒப்பிட்டார் காந்தி. கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்ந்தது ஓர் ஆச்சர்யமே. இந்து மதம் மட்டும் எள் முனையளவு கருணையையாவது…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 11 இங்கிதமில்லாமல், சில சமயங்களில் மிக அநாகரிகமாகவும் ஒருவருக்கு நேரும் வாழ்க்கையின் துயர் மிகுந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி “உண்மையான கடவுளிடம் வா” என்று பேசும் கிறிஸ்தவர்கள் மூடர்கள். உலகில் மூடர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதெல்லாம் சரி. உலகில் மூடர்கள் மட்டுமா இருக்கிறார்கள், காட்டுமிராண்டிகளும் இருக்கிறார்களே? சாவு நெருங்கும் ஒருவன் தன் கடவுளை ஏற்றால் தன்னைச் சேர்ந்தவனாகிறான் என்பது சந்தர்ப்பவாதம் ஆனால் செத்த பிணம் தன் தெரு…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 4 தீண்டாமை ஒழிப்பு என்பது இந்து மதத்தை அழித்து விடும் என்று நம்பிய பலர் தீண்டாமை ஒழிப்பு யாத்திரை மேற்கொண்ட காந்தியை “காந்தியே செத்து போ” என்று சபித்தத்தோடு அவரை கொல்லவும் முறபட்டாற்கள். இதில் அநேகர் பிராமணர்கள் தாம். இன்று அந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நா கூசாமல் கேட்கிறார் இஸ்லாமியர் ஷரியாவைத் தான் ஆதரிப்பார்களாமே என்று. இன்று அமெரிக்காவிலும் இந்துக்களுக்கும், குறிப்பாக பிராமணர்களுக்கும், உள்ளூர் சட்டத்துக்கும் உரசல்கள்…

@Muthuking

Oru Mainavin Kathai Tamil 6 சமீபத்திய மாற்றங்கள் பற்றி நல்ல புத்தகஙள் இல்லை, கள ஆய்வுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வரலாறு நமக்கு ஒரு சித்திரத்தை கொடுக்கிறது. அதில் சில புள்ளிகளை மட்டும் இப்பதிவில் தொடுகிறேன். இந்து சமஸ்தானம் என்று அறிவித்துக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் சகலருக்கும் கல்வி என்று அற்புதமாக அறிவித்தது ஆனால் சாதி இந்துக்களுக்கு நடத்தப்படும் பள்ளிகளில் தலித்துகளைச் சேர்க்கவும் விரும்பவில்லை அவர்களுக்கான பள்ளிகளை தனியாகவேனும் தாங்களே நடத்தவும் விரும்பாமல்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 8 முதலில் நியாயமான எரிச்சல்கள். கிறிஸ்தவர்களில் இங்கிதமோ பண்பாடோ தெரியாமல் மூர்க்கமாக எல்லா தருணத்திலும் ஏதேனும் ஒரு ஆடு சிக்கி விடாதா என்று எதிர்படுபவர் எல்லாம் மத மாற்றம் செய்யப்படுவதற்கானவர்கள் என்று அலைபவர்கள் நிச்சயமுண்டு. மிக முக்கியமாக பெந்தகொஸ்தே சபையோர். நல்ல கிறிஸ்தவனாக இருப்பதை விட கிறிஸ்தவத்துக்கு ஆள் சேர்ப்பதே கிறிஸ்தவம் என்று நினைப்பவர்கள் இவர்கள். சமீபமாக முன்பிருந்ததை விட சர்ச்சுகள் கண்ணில் தென்படுகின்றன என்று நண்பர்கள்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 9 ஆபிரஹாமிய மதங்கள் ஒற்றைப் படையானவை என்று நம்புவதும். உண்மை நடுவில் இருக்கிறது. இந்து மதத்தில் மையச் சரடுண்டு. அதேப் போல் ஆபிரஹாமிய மதங்களில் மையச் சரடு தாண்டி வேறுமைகள் உண்டு. Hinduism has lesser variety than it is supposed and it has a unifying central organizing principle. Likewise there’s more variety in Christianity and Islam that it is commonly understood. இந்தியாவில் மதம் மிகச் சிறந்த வியாபாரம். இந்து மதத்தில் நித்தியானந்தாக்களும்,…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 12 நீ கொலம்பியாவில் முனைவர் பட்டம் வாங்கினாலும் என் கையால் உனக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன்’ என்பவரை விட இறக்கும் தொழுநோயாளிக்கு சிசுருஷை செய்து, மருத்துவம் பார்த்து அந்நோயாளி சாவின் வாயிலில் நிற்கும் போது ஞானஸ்நானம் செய்பவரின் அநாகரீகம் சற்றேக் குறைவானது. இந்த இரு உதாரணங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான வித்தியாசமும் உண்டு. ஒருவனுடைய மதம் சொல்லித் தருகிறது சக மனிதனின் பிறப்பு அவன் இறக்கும் வரை அவன் எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதை…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 16 ஓர் இந்துத்துவருக்கான பதில்கள் - பகுதி மூன்று: மத மாற்றத்தின் தேவைகளும், பலன்களும், அரசியலும் மெக்காலேவினால் இந்தியாவில் கல்வி தழைத்தது. ஐடா ஸ்கட்டர் போன்றவர்களால் மருத்துவம் இந்தியாவில் கோடாக்கோடி உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. மிஷனரிகளால் கடைக் கோடி இந்தியனுக்கும் கல்விச் சென்றடைந்தது. இவற்றில் நூற்றில் ஒரு பங்கையாவது இந்து மதம் செய்திருந்தால் கிறிஸ்தவத்திற்கு இந்தியாவில் நுழைவாயில் அடைப்பட்டிருக்கும். அநேகரும் மத மாற்றத்தை…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 20 எத்தனை உயிர் இழப்புகளோ. இதுவாவது மருத்துவமனை என்ற ஒன்றின் அருகில் அவர்கள் வர ஆரம்பித்தப் பிறகு, அதற்கு முன்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் மகப்பேறு, வயோதிகம் மற்றும் குழந்தைப் பருவம் ஆகியவற்றில் எத்தனை மரணங்கள், எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை கோடிப் பேர்…கணக்கிட்டுவிட்டு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் மத மாற்றம் என்பது பற்றி வாயே திறக்கக் கூடாது. இந்து மதம் போலல்லாது கிறிஸ்தவத்தில் திருச்சபையும் பாதிரியாரும் சபையோரின் வாழ்க்கையோடு…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 17 ஆங்கிலத்திலும் பல நூல்களில் இருந்து தொகுத்து தான் பேச முடியும் அதுவும் அதிகப் பட்சம் 1960-கள் வரை. சமீபத்திய மாற்றங்கள் பற்றி நல்ல புத்தகஙள் இல்லை, கள ஆய்வுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வரலாறு நமக்கு ஒரு சித்திரத்தை கொடுக்கிறது. அதில் சில புள்ளிகளை மட்டும் இப்பதிவில் தொடுகிறேன். இந்து சமஸ்தானம் என்று அறிவித்துக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் சகலருக்கும் கல்வி என்று அற்புதமாக அறிவித்தது ஆனால் சாதி இந்துக்களுக்கு நடத்தப்படும்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 13 சாதி, மதம் சார்ந்த எள்ளல்களும், விலக்கல்களும் இந்திய மண்ணில் ஊறிய பண்புகள். “சிச்சீ என்ன இது மத மாற்றம்” என்பவர்கள் எல்லாம் மானுடத்தை வித்தியாசம் பார்க்காமல் அலைகடலென அணைத்துக் கொள்ளும் மகாத்மாக்கள் அல்ல. பிராமண நண்பன் வீட்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குச் சென்றவன் நண்பன் வீட்டில் தன் மட்டையை மறந்துவிட்டது நினைவுக்கு வரவும் நண்பன் வீட்டுக்குப் போனான். போனவன் கண்டது நண்பனின் பாட்டி அவர்கள் விளையாடிய இடத்தை நீர் விட்டு அலம்பிக்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 14 ஒருவர் “வீட்டு fridge-இல் அசைவம் இருப்பதால் சாப்பிட இயலாது” என்றார். “அரவிந்தா என் பெண்ணை கண்ட முதலியாருக்கும் கட்டித் தர மாட்டேன் வருகிறவன் நாலு தலைமுறைக்கு சுத்தமான தொண்டை மண்டல முதலியாரா என்று பார்ப்பேன்” என்றவர் மருத்துவர். சராசரி இந்து அன்றாட வாழ்வில் எல்லோரையும் என்ன மாதிரி இந்து என்று உரசிப் பார்ப்பதில்லை. ஆனால் உரசிப் பார்க்கும் தருணங்களை இந்துக்கள், எல்லா வகையினரும், தெளிவாகவே கடைப் பிடிக்கிறார்கள். காந்தி முதல் ஜெயகாந்தன்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 15 மதம் மாறுகிற தலித்துகளை மாடுகளோடு ஒப்பிட்டார் காந்தி. கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்ந்தது ஓர் ஆச்சர்யமே. இந்து மதம் மட்டும் எள் முனையளவு கருணையையாவது தலித்துகளிடம் காட்டியிருந்தால் கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றியிருக்காது என்பதே நிஜம். இஸ்லாம், இந்து மதம் போலல்லாது ஆள்பவரின் ஆதரவு பெருமளவு இல்லாமல் என்பதோடு ஆள்பவரின் எதிர்ப்பையும் மீறி வளர்ந்தது தான் கிறிஸ்தவம். காலனி ஆட்சிக்கும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறதா? ஏன்…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 18 ஆரம்பத்தில் பள்ளிகளில் மத மாற்றங்கள் ஊக்குவிக்கப்பட்ட போது சலசலப்பு எழுந்தது பின்னர் அதற்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நிலச்சுவாந்தாரர்களான உயர் ஜாதி இந்துக்களும் மத மாற்றத்தை ஊக்குவித்ததும் நடந்தது. ஏனென்றால் மதம் மாறிய கீழ் ஜாதியினர் சுகாதார பழக்கங்களை மேற்கொண்டு உபயோகமான வேலையாட்களாக இருப்பார்கள் என. திருச்சபையும் இந்த அனுகூலத்திற்காக வேலையாள் எஜமானனுக்கு விசுவாசமாக இருப்பதன் அவசியத்தை விவிலியமே சொல்கிறது என்று ஒத்து…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 19 அரிசிக்கு மதம் மாறினார்கள் என்று நகைக்கும் அறிவிலிகளே அரிசிக்காக மதம் மாறியதற்கு யாரும் வெட்கப்படத் தேவையில்லை மாறாக ஒரு பெரும் சமூகத்தை, சக மனிதனை, அரிசி சாப்பிடக் கூடாதென்று வைத்திருந்த நீங்களே வெட்கப்பட வேண்டும். தங்கள் நாடுகளுக்கு அடிமை வேலைச் செய்வதற்கென்று இழுத்து வரப்பட்டவர்களைத் தான் மற்ற சமூகங்களில் அடிமைகளாக நடத்தினார்கள் ஆனால் இங்கோ உங்களோடவே பிறந்த மனிதனை மாட்டை விட கேவலமாக நடத்தியது நீங்களே. மருத்துவமனைகளில் தலித்துகள் உள்ளே…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 26 எத்தனை உயிர் இழப்புகளோ. இதுவாவது மருத்துவமனை என்ற ஒன்றின் அருகில் அவர்கள் வர ஆரம்பித்தப் பிறகு, அதற்கு முன்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் மகப்பேறு, வயோதிகம் மற்றும் குழந்தைப் பருவம் ஆகியவற்றில் எத்தனை மரணங்கள், எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை கோடிப் பேர்…கணக்கிட்டுவிட்டு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் மத மாற்றம் என்பது பற்றி வாயே திறக்கக் கூடாது. இந்து மதம் போலல்லாது கிறிஸ்தவத்தில் திருச்சபையும் பாதிரியாரும் சபையோரின் வாழ்க்கையோடு…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 23 ஒரு சமூகமாக மதம் மாறுவது பாதுகாப்பானது. மத மாற்றம் என்பது ஏதோ ஒன்றும் தெரியாத முட்டாள்கள் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியவர்கள் செய்தது என்று தான் காந்தியும் பேசினார். மிக, மிக கீழ்த்தரமாகவே பேசியிருக்கிறார். அறிவற்ற அரிஜனங்களுக்கு மிஷனரிகளோடு எதிர் வாதம் செய்ய முடியாது ஆனால் தன்னால் முடியும் என்று எந்த சாஸ்திர ஞானமும் அற்ற, கீதையை மொழிப் பெயர்ப்பின் மூலம் படித்த, காந்தி அகங்காரத்தோடுப் பேசினார். இன்று காந்தியை மேற்கோள் காட்டும் எந்த…

@Muthuking

Oru indruvukana matha matram Tamil 25 இன்று இந்துத்துவர்கள் பீற்றிக் கொள்ளும் இலக்கியச் செல்வங்கள் பலவும் மீட்டெடுத்தது காலனி ஆட்சியும், மிஷனரிகளும், மிஷனரிகளின் அச்சுக் கூடங்கள். ஏன் காந்தி கீதையை எட்வின் ஆர்னால்டின் மொழிப் பெயர்ப்பில் படிக்க வேண்டியிருந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். ஐயோ விவிலியத்தை வேதம் என்கிறார்களே, ஐயோ ‘கிறிஸ்து பஞ்சாங்கம்’ என்கிறார்களே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறவர்கள் மறப்பது கிறிஸ்தவம் இந்து மதம் போலல்லாது தன் மதத்தின் நூலை…

@Muthuking

Oru Mainavin Kadhal Tamil மீனாட்சிப்புரத்திலும் ஒரு சமூகமே மதம் மாறியது. ஏன்? சமீபத்தில் வெளிவந்த பேட்டி ஒன்றில் ஒரு முதியவர் சொன்னார் பேருந்தில் சீட்டில் உட்கார அவருக்கு உரிமையில்லையென்றும் மதம் மாறிய பின் அமர முடிகிறதென்றார். இது எப்போதோ நடந்ததல்ல, 70-80-களில் தமிழகத்தில் இது தான் நிதர்சனம். இப்படி ஒன்று நம்மூரில் நடந்ததே பலருக்குத் தெரியாதே? மதம் மாறினால் இட ஒதுக்கீடு சலுகையை இழக்க நேற்ந்திருக்குமே என்றதற்கு அப்பெரியவர் ‘தன்மானம் கிடைத்திருக்கிறது’ என்றார். இதெல்லாம்…