read.cash Log in
@Muthuking

Gurunathar Bharathiyar Tamil 10

புதுவைத் தேர்தல் காலத்தில் தோட்டி இனத்தைச் சேர்ந்த தம்பலா என்றழைக்கப்பட்ட தலைவர் ஒருவர் அதிகம் அச்சமூட்டியவர். அவர் வீடு தேடிப் போய்ப் பாரதி இரண்டு வார்த்தைகள் பேசுகிறான். “யாரையும் ஒதுக்குதல் கூடாது. முரடராயிருந்தாலும். பேசினால் தான் அவர்களை நம் பக்கம் இழுக்க முடியும்” என்று கனகலிங்கத்துக்குப் பயிற்றுவிக்கிறான். பாரதியினால் உந்தப்பட்ட கனகலிங்கம் சுதேசமித்திரனுக்குச் சாதிய பிரச்சனைக் குறித்து எழுதிய கடிதம் ஒன்று சமீபத்தில் காணக்கிடைத்திருக்கிறது என்றும் அதன் மூலம் நமக்கு அறிய வரும் கனகலிங்கம் இன்னொரு பரிமாணத்தை அடைகிறார் என்று ஆரம்பத்தில் சுட்டிக் காட்டிய ய.மணிகண்டனின் கட்டுரைச் சொல்கிறது.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.