Oru indruvukana matha matram Tamil 26
எத்தனை உயிர் இழப்புகளோ. இதுவாவது மருத்துவமனை என்ற ஒன்றின் அருகில் அவர்கள் வர ஆரம்பித்தப் பிறகு, அதற்கு முன்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் மகப்பேறு, வயோதிகம் மற்றும் குழந்தைப் பருவம் ஆகியவற்றில் எத்தனை மரணங்கள், எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை கோடிப் பேர்…கணக்கிட்டுவிட்டு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் மத மாற்றம் என்பது பற்றி வாயே திறக்கக் கூடாது. இந்து மதம் போலல்லாது கிறிஸ்தவத்தில் திருச்சபையும் பாதிரியாரும் சபையோரின் வாழ்க்கையோடு பிணைந்தவை. அதனால் தான் தூத்துகுடியில் சபையோருக்கான வாழ்க்கை பிரச்சனையில் திருச்சபை முன் நின்றது. காலனி காலத்தில் நீதிமன்றங்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கென்றாலும் தலித்துகள் உள்ளே நுழைந்து வாதிட முடியாத போதெல்லாம் அவர்கள் மேல் கருணைக் கொண்டு மிஷனரிகள் வாதாடியதுண்டு. ஒரு சமூகத்தின் பெண்களை அரை நிர்வாணமாக்கி வர்ணாசிரமம் குதூகலித்தப்போது துணை நின்றது மிஷனரிகள் தானே?
2 comments
மகளிருடனும் குழந்தைகளுடனும் பொந்துகளுக்குள் புகுந்து துயிலத்தொடங்கிவிடுகிறார்கள்
தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும்