read.cash Log in
@Muthuking

Kumbamela samyathil kalara Tamil 4

வேறு இரண்டு பேருக்கு (பிராமணர்களா என்று தெரியவில்லை ஆனால் உயர் ஜாதியினர்) உடனே மூக்கில் வேர்த்தது. சாப்பேக்கர் சகோதரர்கள் என்று இன்று அடையாளப்படுத்தும் இருவர் பிளேக் நோயை கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகளை சுட்டுக் கொன்றார்கள். அந்த சாபேக்கர்களுக்கு பிந்நாளைய இந்திய அரசு ஸ்டாம்பு வெளியிட்டு கவுரவம் செய்தது. இந்தியர்கள் விந்தையானவர்கள். மகாமகத்தை காப்பாற்றிய கே.டி.மேத்யூ பற்றி ஒரு செய்தியும் கண்டறிய முடியவில்லை ஆனால் சாப்பேக்கர் சகோதரகள் பற்றி விக்கிப்பீடியா பக்கமே இருக்கிறது.  அப்போது ஆங்கிலேய அரசின் முக்கிய பிரச்சனை மருத்துவமனைக்கு செல்ல மறுத்த இந்துக்களை கவனிப்பது. பலருக்கு மருத்துவமனை சென்று கீழ் ஜாதிக்காரனோடு ஒரே அறையில் இருக்க நேர்வதை விட இறப்பதே மேல் என்ற வீம்பு வேறு. அவர்களை, ஜடாயு சொல்வதைப் போல், 'செத்துப் போ

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.