Oru indruvukana matha matram Tamil 11
இங்கிதமில்லாமல், சில சமயங்களில் மிக அநாகரிகமாகவும் ஒருவருக்கு நேரும் வாழ்க்கையின் துயர் மிகுந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி “உண்மையான கடவுளிடம் வா” என்று பேசும் கிறிஸ்தவர்கள் மூடர்கள். உலகில் மூடர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதெல்லாம் சரி. உலகில் மூடர்கள் மட்டுமா இருக்கிறார்கள், காட்டுமிராண்டிகளும் இருக்கிறார்களே? சாவு நெருங்கும் ஒருவன் தன் கடவுளை ஏற்றால் தன்னைச் சேர்ந்தவனாகிறான் என்பது சந்தர்ப்பவாதம் ஆனால் செத்த பிணம் தன் தெரு வழியேப் போகக் கூடாதென்கிறவன் காட்டுமிராண்டி. திருமணத்தை காரணம் காட்டி காதலித்தவர்களில் ஒருவரை மதம் மாறச் சொல்வது தவறு ஆனால் ஆண்டப் பரம்பரை பெருமை பேசி காதலித்தவர்களை வெட்டிப் போடுவது அதை விட மிருகத்தனமானது
2 comments
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் சாலையை மறித்து தொழுகை
தெருக்களில் நமாஸ் செய்வது கேள்விக்குள்ளாகி ஒரு மாத்வர் அதைக் குறிப்பிட்டு