Oru indruvukana matha matram Tamil 25
இன்று இந்துத்துவர்கள் பீற்றிக் கொள்ளும் இலக்கியச் செல்வங்கள் பலவும் மீட்டெடுத்தது காலனி ஆட்சியும், மிஷனரிகளும், மிஷனரிகளின் அச்சுக் கூடங்கள். ஏன் காந்தி கீதையை எட்வின் ஆர்னால்டின் மொழிப் பெயர்ப்பில் படிக்க வேண்டியிருந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். ஐயோ விவிலியத்தை வேதம் என்கிறார்களே, ஐயோ ‘கிறிஸ்து பஞ்சாங்கம்’ என்கிறார்களே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறவர்கள் மறப்பது கிறிஸ்தவம் இந்து மதம் போலல்லாது தன் மதத்தின் நூலை சாமான்யனின் பாஷையில் கொண்டு சேர்க்கிறது. அதன் பின் எப்பேர்ப்பட்ட போராட்டமும் ரத்தமும் நிறைந்த வரலாறு இருக்கிறது. மொழி மாற்றம் செய்வதில் மத மாற்ற நோக்கும் இருந்தது ஆனால் அந்நோக்கு இல்லாமல் செய்தவர்களும் இருந்தார்கள்.
2 comments
மகளிருடனும் குழந்தைகளுடனும் பொந்துகளுக்குள் புகுந்து துயிலத்தொடங்கிவிடுகிறார்கள்
தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும்