En gurunathar Bharathiar Tamil Part 6
கனகலிங்கம். புதுவை நீதிமன்றங்களில் சாட்சி சொல்வோர் ஏற்க வேண்டிய சத்திய பிரமாணம் சாதி, மத ரீதியாக வேறுப்பட்டிருந்ததாம். இஸ்லாமியருக்கு முஸ்லிம் ஒருவர் குர்-ஆன் புத்தகம் கொண்டும், பிராமணரல்லாதோருக்கு ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும், “ஹரிஜன சமூகத்தாருக்கு வள்ளூவப் பண்டாரம் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும்” சத்திய பிரமானம் செய்விப்பார்களாம். புதுவையில் பாரதி இருந்த காலத்தில் தேர்தல்கள் அமளிப்பட்டன என்று கனகலிங்கமும், செல்லம்மாளும் பதிவுச் செய்கிறார்கள். பாரதி தேர்தல் காலத்தில் ஹரிஜனங்களைக் கோயில் அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை எழுதி குவளைக்கண்ணனையும் கையொப்பமிட வைத்து விடுகிறார். அதன் பலனாகக் குவளைக்கண்ணன் சக ஐயங்கார்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டாராம்.
2 comments
ஹரித்துவார் தாண்டி காலரா பரவும் போது அந்தந்த உள்ளூர் வகைமை இன்னும் வலுவுடைய
முழங்கும் போது அந்த வைபவத்துக்காகப் பாறதி அழைத்திருந்த பிராமண நண்பர்கள் யாரேனும்