read.cash Log in
@Muthuking

En gurunathar Bharathiar Tamil 2

பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர், ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூலைப் படைத்தவர்". கட்டுரை கனகலிங்கம் பற்றிக் கிடைத்த புதியதோர் தகவல் பற்றியது. அதற்கான முதல் வரிகள் தான் அவை. கனகலிங்கம் என்கிற நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் முகமாக, சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் என்றெல்லாம் சொல்லிவிட்டு தான் அவர் எழுதிய நூலே குறிப்பிடப்படுகிறது. வ.ரா எழுதிய “மகாகவி பாரதியார்” நூலுக்கும் இப்படி ஓர் அறிமுகம் கிடைக்குமா என்று தெரியவில்லை. “பாரதியின் அன்புக்குரிய சீடர், ஆதிக்கச் சமூகத்தவர், பாரதியால் பூணூல் கழற்றியவர், ‘மகாகவி பாரதியார்’ எனும் நூலை எழுதிய வ.ரா என்று யாரும் எழுதிப் பார்த்ததில்லை.

50¢

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.