read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 4

கலாச்சாரம், பண்பாட்டு அடையாளம் என்ற போர்வையில் இந்தியாவின் உயரிய அரசாங்க விருதுகளின் பெயர்கள் துரோணாச்சார்யார், அர்ஜுனன் ஆகியவை. மருந்துக்குக் கூட இந்தியாவில் ஆயிரம் வருடத்துக்கு மேல் வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய அடையாளம் இல்லை எங்கும். குழந்தை திருமணத்தை தடுக்கவும், விதவைகள் மறுமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கும் இந்து மடாதிபதிகளிடம் எவ்வளவு சாஸ்திர ரீதியாக மன்றாட வேண்டியிருந்தது என்பது வரலாற்றைப் புரட்டினால் தெரியும். தீண்டாமைக்கு ஆதரவாக காஞ்சி மஹா பெரியவா (??) காந்தியோடு வாதிடும் போது காந்தியும் சாஸ்திரம் அதை அங்கீகரித்தால் தான் ஏற்பதாகச் சொல்கிறார். சாஸ்திர ரீதியாக தீண்டாமைக்கு ஆதரவில்லை ஆகவே தான் அதை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பதாகாது என்று சமாதானம் சொன்னார் காந்தி.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.