Kumbamela samyathil kalara Tamil 2
அப்போதிருந்த மக்கட் தொகையில் இது மிகப் பெரிய விழுக்காடு. கும்ப மேளாக்களினால் உருவான காலரா பல வருடங்களில் பல இந்தியர்களை, எல்லா மதத்திலும், காவு வாங்கியிருக்கிறது. இதில் கும்ப மேளாக்களின் போது நடக்கும் கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களை சேர்க்கவில்லை. அது தனி கணக்கு. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே ஆங்கிலேய அரசு இந்து மத விழாக்களின் போது காலரா பரவுவதை தடுக்க நடவிக்கைகள் எடுத்தன. இன்றைய இந்துத்துவ வெறியர்களைப் போல் அவர்கள் நடக்கவில்லை. 1912-இல் அரசு மத யாத்திரை தலங்களில் சுகாதார ஆய்வு நடத்த ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தது. சென்னை கமிட்டி சென்னை ராஜதானியில் 21 திருத்தலங்களைப் பார்வையிட்டது. நடுவில் உலக மகா யுத்தம் இடையூறுச் செய்தது. பின்னர் 1920 ஒரு பிரத்தியேக ஆபீஸர் நியமிக்கப்பட்டார். அவர் நேரடிப் பார்வையில் 1920 கும்பகோணம் மகாமகத்துக்கான சுகாதார அமைப்புகள் செய்யப்பட்டன. கும்பகோணத்தில் விழா தொடங்கும் முன்னரே காலரா பரவ ஆரம்பித்தாலும் விழா செவ்வனே நடைப்பெற்றதுடன் விழாவினால் காலரா மேலும் பரவவில்லை. அந்த ஆபீஸர் 1922-இல் இறுதி அறிக்கையை சமர்பித்தார். இந்து பக்த சிரோண்மணிகள் குவியும் இடங்களில் சுகாதார அமைப்புகள் செய்வதன் அவசியத்தை அறிக்கை வலியுறுத்தியது. மகாமகத்தை நல்லபடி நடத்தி முடித்த அந்த ஆபீஸர் மருத்துவர் கே.டி. மேத்யூ. அவர் மேத்யூ, ஜடாயு அல்ல, செத்துப் போகட்டுமே என்று சொல்வதற்கு.
2 comments
ஆகியவற்றால் தவறான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்களைப் பற்றி ஆய்வு நடத்த வேண்டிய நிலையில் என்னமோ தாங்கள் மாத்திரம்
இஸ்லாமியர் மூட நம்பிக்கைகளும் மதப் பற்றும் கொண்டவர்கள் அவர்களை செத்துப் போக விட்டு விட