read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 6

மாத்வர் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர் எழுதுகிறார், “இன்றளவும் அந்தண , அர்ச்சக விரோதத்தை வளர்ப்பது யார்?” இதை தமிழ் நாட்டில் செய்வது திராவிட இயக்க இந்துக்கள் தாமே? அதைச் சொல்ல என்ன வெட்கம்? அதே மாத்வர் கேட்கிறார், “சாதியின் பெயரைச் சொல்லி ஹிந்து மதத்தவர் இடையே கலவரத்தை  தூண்டி விட்டது யார்?”. அதாவது அதைச் செய்வது இஸ்லாமியராம். வெட்கமாயில்லை இப்படி பொய் சொல்வதற்கு? எத்தனை சாதிய கலவரங்களுக்கு இஸ்லாமியர் பொறுப்பு? சாதிய கலவரம் செய்ய இந்துக்களுக்கு யாரேனும் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?  இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவின் குடிமக்கள் மற்ற எல்லோரையும் அவர்களிடையேயும் நிறை, குறைகள் உண்டு. அவர்களை பிரத்தியேகமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது கயவாளித்தனம்.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.