Jeyakanthanin marumalarchikal
தி.மு.க எத்தகைய இயக்கமாக செயல்பட்டது, அது எப்படி ஒரு ஜனத்திரளைக் கவர்ந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது என்பது குறித்தும் அறிமுகமாவது செய்துக் கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஜெயகாந்தனின் உரையின் தேவையை உணர்த்தும். பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராவின் தலைமையிலான திராவிடர் கழகமும் அதன் பின் அதிலிருந்து பிரிந்து அண்ணாத்துரையின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தங்களை ஒரு அரசியல் மாற்றத்தை உண்டுப் பண்ணுகிற இயக்கங்களாக மட்டும் முன்னிறுத்திக் கொள்ளவில்லை. ஈ.வெ.ராவும், அண்ணாத்துரையும் தங்களைக் கலாசாரக் காவலர்களாகவும், கலை இலக்கியங்களை கேள்விக்குட்படுத்தும் அறிவியக்கங்களாகவும் முன்னிறுத்தி அதன் பெயரில் அவர்கள் நிகழ்த்திய பிரசாரங்களே ஜெயகாந்தன் எனும் எழுத்தாளரை போர்குனமிக்க பிரசாரகாக வெளிக்கொணர்ந்தது.
1 comment
இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.