read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 6

செய்த நேரத்தில் தான் சராசரி ஹிந்து தனது தவறுகளை குறித்து வெயிலில் காய்ந்தவாறு நின்று யோசித்தான்” என்று நக்கலாக எழுதுகிறார். கொடுமை. நெல்லி படுகொலை முதல் குஜராத் படுகொலைகள் வரை இஸ்லாமியர் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் விசாரணை கமிஷன்கள் கேட்பாரற்று போயின. ஹாஷிம்புராவில் இஸ்லாமியரை குருவி சுடுவது மாதிரி சுட்டு வீசினார்கள். 31 வருடங்களாக சுட்டுத் தள்ளிய போலீஸார் மீது வழக்கு நடக்கிறது. அதற்குள்ளாக இதோ உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியரை போலீஸ் குறி வைத்து தாக்குகிறது. ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி குற்றம் சாட்டிய பால் தாக்கரேவை அரை மணி நேரம் கூட கைது செய்ய முடியவில்லை. அவருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் வேறு.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.