read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 23

ஒரு சமூகமாக மதம் மாறுவது பாதுகாப்பானது. மத மாற்றம் என்பது ஏதோ ஒன்றும் தெரியாத முட்டாள்கள் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியவர்கள் செய்தது என்று தான் காந்தியும் பேசினார். மிக, மிக கீழ்த்தரமாகவே பேசியிருக்கிறார். அறிவற்ற அரிஜனங்களுக்கு மிஷனரிகளோடு எதிர் வாதம் செய்ய முடியாது ஆனால் தன்னால் முடியும் என்று எந்த சாஸ்திர ஞானமும் அற்ற, கீதையை மொழிப் பெயர்ப்பின் மூலம் படித்த, காந்தி அகங்காரத்தோடுப் பேசினார். இன்று காந்தியை மேற்கோள் காட்டும் எந்த இந்துத்துவரும் காந்தி முன் வைத்த இந்து மதத்தையோ, கீதையைப் பற்றிய புரிதலையோ இடது காலால் கூட சீண்ட மாட்டார்கள். காஞ்சி மடமா காந்தியா என்றால் காந்தியின் சாஸ்திர விவாதங்களை புழக்கடைக்குத் தள்ளுபவர்களெல்லாம் “காந்தி கிறிஸ்தவம் பற்றி சொன்னது தெரியுமா” என்று சவடால் விடுகிறார்கள்.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.