Nalayira thivya pirabantham odi pogalama 8
எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது:
1. நல்ல கவி படிப்பதற்க்கும், நரகத்தைப் பற்றி சொல்வதற்க்கும் என்ன சம்பந்தம்?
2. முருகனைப் பற்றிய நல்ல கவி மட்டும்தான் படிக்கச் சொல்கிறாரா?
இதில் என்னையா குழப்பம் ?
மருத்துவரிடம் உடம்பு சரியில்லை என்று போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். மூணு வேளை, மூணு நாள் சாப்பிடுங்க என்கிறார் ?
என்ன அர்த்தம்?
சாபிட்டால் குணமாகும், சாப்பிடாவிட்டால் குணமாகாது.
சாப்பிடாட்டி குனமாகுதுனு சொல்லலியே அப்படின்னு கேக்கப் படாது...அது அப்படித்தான்.மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான்
Nalayira thivya pirabantham odi pogalama 6
இருப்பீர் = இருங்கள்
எரி வாய் நரக = தீப் பிழம்போடு கூடிய நரகக்
குழியும் = குழியும்
துயரும் = தீக்குழியில் கிடந்து உழலும் துயரும்
விடாப் படக் = தண்ணி தாகத்துடன்
கூற்றுவன் ஊருக்குச் = யம பட்டணத்திற்கு
செல்லும் வழியும் துயரும் = செல்லுகின்ற வழியும், அந்த வழியில் உள்ள துயரமும்
பகரீர் பகரீர் மறந்தவர்க்கே = மறந்து போனவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள். ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள்
மறுபடியும் சொல்லுகிறேன், நல்ல கவி படியுங்கள்
Ravananin puthira thavam Tamil 6
கிழியும் படி = சுக்கல் சுக்கலாக கிழியும் படி
அடர் குன்று = அடர்த்தியான குன்று. சூர பத்மனின் நண்பன் பெரிய மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான். அந்த மலை கிழியும் படி. மலை என்பது ஒரு உவமை. ஆணவம், கன்மம், மாயையை, காமம், குரோதம், மதம், ஆசை போன்ற மலைகள் நம்மை வழி மாற்றிப் போடுவதை அப்படி குறிப்பிடுகிறார் அருணகிரி.
எறிந்தோன் = உடைத்து எறிந்தோன்
கவி கேட்டு உருகி = சும்மா கேட்டா மட்டும் போதாது, கேட்டு, உணர்ந்து உருக வேண்டும்
இழியும் கவி கற்றிடாது = நல்ல கவி கேட்டால் மட்டும் போதாது, மோசமான கவிதைகளை கற்காமல் இருக்க வேண்டும்.
Ravananin puthira sogam Tamil 5
சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது
அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா?
பஞ்சி = பஞ்சு போன்ற
ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்தும் படி. ஒளி விட்டு விளங்கக்கூடிய , குளிர்ச்சியான தளிர்களை விட (விஞ்ச) மென்மையான பாதம் வருந்த
செஞ் செவிய = செக்க சிவந்த
கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான
சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடி
அம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போல
அன்னம் என = மென்மையான அன்னம் போல
மின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போல
நஞ்சம் என = விஷம் போல
வஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்
Ravananin puthira thavam Tamil 2
அவள் தரையையை மிதித்து நடக்கிறாள். அதில் தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா ? அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும். அவ்வளவு தூரம் அவள் கால் உள்ளே போகிறது. அப்பா அவள் உடல் எப்படி இருக்கும்.
அவள் வரும்போது, அனல் கக்கும் கண்ணை உள்ள எமனும், ஏதாவது குகைக்குள் சென்று ஒளிந்து கொள்வானாம்
அவள் நடந்து வரும் போது அவள் பின்னால் மலைகள் எல்லாம் தடம் புரண்டு, உருண்டு பிரண்டு வருமாம்.
எவ்வளவு பிரமாண்டமான உருவம்?
பொருள்:
சிலம்புகள் = சிலம்பு என்றால் மலை என்று ஒரு பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இதை வைத்து ஒரு அருமையான இடம் உண்டு.
சிலம்பிடை = அப்படி மலைகள் அவளுடைய சிலம்பில் (கொலுசில்)
செறித்த கழலோடும் = அடர்ந்த (நிறைய மலைகளை போட்டு வைத்து இருக்கிறாள்) காழலோடும்
நிலம் புக மிதித்தனள் = கால் நிலத்துக்குள் போகும் படி மிதித்தாள்
நெளித்த குழி = அப்படி மிதித்தபோது
Ravananin puthira thavam Tamil
பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள்.
இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்.
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர. வந்தாள்.
தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்குப் பதில் மலைகளை பிடுங்கி போட்டு வைத்து இருக்கிறாள். அப்படி என்றால் அது எவ்வளவு பெரிய சிலம்பாய் இருக்கும், அதை அணிந்த கால் எவ்வளவு பெரிதாய் இருக்கும், அந்தக் காலை உடையவள் எவ்வளவு பெரிய உருவமாய் இருப்பாள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
Ravananin puthira thavam Tamil 4
அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’
ரொம்ப எளிய பாடல்.
அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.
இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.
ஒன்று, இன்னும் உன் திரு உருவை காண்கிலேன்.
மற்றொன்று, உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால், உன் திரு உருவத்தை தனியாகக் காணேன்
என்னிடம், "உன்னுடைய பிரான் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.
பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்
Ravananin puthira thavam Tamil 5
இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்.போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்.கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
பதம் பிரிப்போம்.கிழியும் படி அடர் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
இழியும் கவி கற்றிடாது இருப்பீர் எரி வாய் நரக
குழியும் துயரும் விடாப் படக் கூற்றுவன் ஊருக்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
Ravananin puthira sogam Tamil 3
விழிக்கும்; = என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பான்
முகிழ்க்கும்; = ஒன்றும் தெரியாமல் கண்ணை மூடுவான் (முகிழ்த்தல் = கண்களை மூடுதல்
தன் மேனியால் உழும் நிலத்தை; = அவன் காலை இழுத்து இழுத்து
நடப்பது நிலத்தை உழுவது போல இருக்கிறது
உருளும்; புரளுமால். = தரையில் கிடந்து உருளுவான்,
புரளுவான்பனையிலும் = பனை மரம் போன்ற அழகிய தோள்களில்
உந்தி தடத்தில் = வயிற்றில்
தனத்தில் = அழகிய மார்பில்
கிடக்கும் வெங் காம சமுத்திரமே = கிடக்கும்
வெம்மையான காம சமுத்திரமே
கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்
கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.
தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.
கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.
Ravananin puthira thavam Tamil 3
வேலைச் சலம் புக.= வேலை என்றால் கடல். கடல் தண்ணி புக.
அனல் தறுகண் அந்தகனும் = தீப் பறக்கும் கண்ணை உடைய எமனும்
அஞ்சிப் பிலம் புக. = பயந்து குகைக்குள் ஒளிய
நிலக் கிரிகள் = நிலத்தில் உள்ள மலைகள் (கிரி = மலை) எல்லாம்
பின் தொடர. வந்தாள் = அவள் பின்னால் உருண்டு பிரண்டு பின் தொடர்ந்து வர வந்தாள்.
இவள் பெண்ணா ? இவளுக்கு பெண்ணுக்கு உள்ள நளினம் ஏதாவது இருக்கிறதா ?
தாடகை வதத்தில் இன்னும் கொஞ்சம் அருமையான பாடல்கள் இருக்கின்றன ?
உங்களுக்கு விருப்பம் என்றால், எனக்கு எழுதச் சம்மதம்...உங்கள் விருப்பத்தை நல்ல கற்பனைதான். ஏதோ கண் முன் காட்சி எழுவது போல இருக்கிறது. இல் எழுதுங்கள்
Ravananin puthira sogam Tamil 2
மிக எளிமையான பாடல். இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம்
கேட்டால், உங்களையும் CSJK வையும் ஒரே காரில் அனுப்பி அதில் 80 -s வந்த
பாடல்களையும் போட்டு விடனும். ....:)
எழும்;
= எழுந்து நிற்பான்
இருக்கும்; = நிற்க கூட முடியாமல் உட்காருவான்
இரைக்கும்; = அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான்.
அவ்வளவு வலிமை குன்றி விட்டான்.
இரக்கம் உற்று அழும்; = சுய பச்சாதாபத்தில் இரக்கம் கொண்டு
வாய் விட்டு அழுவான்
அரற்றும்; = அர்த்தம் இல்லாமல் அரற்றுவான்
அயர்க்கும்; = சோர்ந்து போவான்
வியர்க்கும் = பலம் குன்றியதால்
வியர்ப்பான்
போய் விழும்; = இருக்கவும் முடியாமல், நிற்கவும்
முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் போய் விழுவான் (மெத்தை மேல்
Ravananin puthira sogam Tamil 4
கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்
கரிய பெரிய அரக்கியான தாடகையை கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.
அவள் ஒரு பெண்.
மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம்.
க்ஷத்ரிய தர்மம் அல்ல. இராமன் தாடகை என்ற பெண்ணைக் கொன்றான் என்ற பழிச் சொல் அவன் மேல் வரக்கூடாது எனபதில் கம்பன் மிகக் கவனமாய் கவி புனைகிறான்.
படிப்பவர்களுக்கு தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும்.
அப்படி ஒரு எண்ணம் வந்து விட்டால், இராமன் மேல் பழி வராது.
அதை எப்படி செய்வது என்று கம்பன் சிந்திக்கிறான்...
இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்
Ravananin puthira sogam Tamil
புத்திர சோகம் இராவணனை படுத்துகிறது.
எவ்வளவு பெரிய வீரன்.
உலகை எல்லாம் வென்றவன். அவன் அழுகிறான். தரையில்
கிடந்து புரளுகிறான்.
நடக்க கூட முடியாமல் காலை இழுத்துக் கொண்டு
நகர்கிறான்.
அது என்னவோ அவன் நிலத்தை உழுவது போல இருக்கிறது.
அவன் சோகத்தை கம்பன் பிழிந்து தருகிறான்.
படிக்கும் நமக்கு இராவணன் மேல் ஒரு பரிதாபம்
வருகிறது. ஐயோ பாவம் என்று ஒரு பச்சாதாபம் எழுகிறது.
எழும்;
இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்
விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;
தன் மேனியால்,
உழும் நிலத்தை; உருளும்;
புரளுமால்.
Nan neenka ni parka Tamil
கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர் விலராகிச் சார்வதுசதிரே.
கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை
கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு
முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி
மாயோன் = கண்ணன், திருமால்
மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம்
பொழில் = பூங்கா
சூழ் = சூழ்ந்த
மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர்
விலராகிச் = தளர்ச்சி இல்லாமல்
சார்வதுசதிரே = சார்வது சதிரே = சேருவது மேலும் புத்திசாலிதனம்
கந்தர் அலங்காரம் - சுடும் காமம்
காமம் சுடும்.
காமம் தீ. அது ஊனை உருக்கும். உயிரை உருக்கும்.
காமம் மனிதர்களை தடம் புரட்டி போட்டிருக்கிறது. இராஜியங்களின் எல்லை கோடுகளை
மாற்றி எழுதி இருக்கிறது.
Nan neenka ni parka Tamil 3
தீ நெருங்கினால் தான் சுடும். காமம் விலகி நின்றாலும் சுடும் என்பார்வள்ளுவர்.
தொடிர் சுடின் அல்லது காம நோய் போல
விடிர் சுடல் ஆற்றுமோ தீ ?
காமத்தை போல விட்டு விலகியபின்னும் தீயால் சுடமுடியுமா என்று கேட்கிறார்
வள்ளுவர்.
கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர
முடியாத கடல்.
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே சீர் பிரித்த பின்
கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்தில் புணை என யான் கடந்தேன் சித்திர
Nan neenka ni parka Tamil 2
மாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே
கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற
குறத்தி = குற வள்ளி
பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன்.
அருளால் = அவனுடைய அருளால்
கலங்காத = கலக்கம் இல்லாமல்
சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு
புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு
தெரியவில்லை.
புணை என = அந்த உறுதியான புத்தியை தெப்பமாக கொண்டு
யான் கடந்தேன் = நான் கடந்தேன். எதை கடந்ததாக சொல்கிறார் ?
சித்திர மாதர் = சித்திரம் போன்ற அழகிய பெண்களின் அல்குல் படத்தில்
Nan neenka ni parka Tamil
நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - கிளரொளி http://interestingtamilpoems.blogspot.com/2012/03/blog-post_31.html
"கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம்.
இளமை எவ்வளவு இனிமையானது.
அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக
தளர்ச்சி வந்து சேரும் .
வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும்.
இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது.
எனவே, இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால்
சேர்ந்து இருப்பது புத்திசாலி தனம் என்கிறார் நம்மாழ்வார்...(சொன்னா எங்கய
கேக்குராங்க்ய ... கடவுள் இல்லை , இருந்தா காமி பாப்போம் அப்படின்னு வாதம்
பன்றாங்க்ய ... தருதல புள்ள குட்டிக தாயே )
Nalayira thivya pirabantham odi pogalama 12
கிருஷ்ணன்: ஹ்ம்ம்...மத்தது எல்லாம் செய்ய முடியும் என்றே வைத்துக்
கொள்வோம்....என்னை எப்படி கட்டி போடுவாய் என்று கேட்டான் ?
சகாதேவன்: அது ரொம்ப சுலபம்...என் அன்பால், என் பக்தியால் உன்னை கட்டிப்
போடுவேன் என்றான்.
கிருஷ்ணன்: எங்க என்னை கட்டு பார்ப்போம் என்று ஆயிரம் ஆயிரம் உருவம்
எடுத்தான்... சகாதேவன் அவனை தன் பக்தியால் கட்டிப் போட்டான். சகாதேவா,
"ஒத்துக் கொள்கிறேன்..என்னை உன் பக்தியால் கட்டிப் போட முடியும்
என்று...தயவுசெய்து கட்டுகளை அவிழ்த்து விடு" என்றான்.
சகாதேவன்: எங்களுக்கு வெற்றி கிடைக்க அருள் புரிந்தால், கட்டை அவிழ்த்து
விடுகிறேன் என்றான்.
கிருஷ்ணனும் அப்படியே அருள் புரிய, அவன் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.
வில்லி புத்துராழ்வார் எழுதிய பாரதத்தில் இருந்து அந்தப் பாடல்
Mabharatham Varamal Kakka Tamil
பாஞ்சாலி: ஒன்றும் சொல்லவில்லை. தன் விரித்த கூந்தலை காட்டினாள். கிருஷ்ணன்
புரிந்து கொண்டான்.
சகாதேவன்: அவன் ஒரு பெரிய ஞானி. அவன் சொல்லவான் "கிருஷ்ணா, நீ இந்த போரை நடத்த
முடிவு செய்து விட்டாய்...எதற்கு எந்த நாடகம் ... "
கிருஷ்ணன்: என்ன சகாதேவா இப்படி சொல்கிறாய். இந்தப் போரை நிறுத்த முடியும்
என்றால், நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். இந்தப் போரை நிறுத்த
உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா ? என்று கேட்டான்.
சகாதேவன்: இருக்கு கிருஷ்ணா. கர்ணனுக்கு முடி சூட்டி, அர்ஜுனனை கொன்று,
பாஞ்சாலியை மொட்டை அடித்து, உன்னையும் கட்டி போட்டால், வாராமல் காக்கலாம் இந்த மா
பாரதப் போர் என்றான்.
Nalayira thivya pirabantham Part 1 Tamil
அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் மாணிக்க வாசகர்.
இறைவன் அன்புக்கு கட்டுப் படுபவன்.
கம்ப இராமாயணம் அளவுக்கு புகழ் பெறாவிட்டாலும், வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ரொம்ப அருமையான
பாடல்களை கொண்டது. படிக்க கொஞ்சம் கஷ்டம்.
கம்ப இராமாயணம் அளவுக்கு எளிமை அல்ல.
அதுவும் காரணமாய் இருக்கலாம்.
"கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம்.
இளமை எவ்வளவு இனிமையானது.
அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக
தளர்ச்சி வந்து சேரும் .
வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும்.
இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது.
Nalayira thivya pirabantham odi pogalama 7
உறைக்கும் எயிறு = போன்றவை என் காதலின் பற்கள்
கெழு துவர்வாய், = சிவந்த இதழ்கள் (வாய்)
அரம்போழ் அவ்வளைக் = அரத்தால் தீட்டிய அழகான வளையல்கள் அணிந்த கைகள்
குறுமகள் = சின்னவள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே = யாழின்
நரம்பை மீட்டியது மாதிரி இனிமையான குரலை கொண்டவள் .....
காதலனுக்கு, அவன் ஆளின் அழகு தான்
தெரியும்.
திரு வாசகம் - திரு தெள்ளேணம்
தெள்ளேணம் எனபது ஒரு இசைக் கருவி. தோற்க் கருவி. அதை தட்டி தட்டி
பாடுவார்கள். அப்படி "தெள்ளேணம் கொட்டாமோ" என்று மாணிக்க வாசகர் பத்து பாடல்கள்
பாடி உள்ளார். அதில் இருந்து சில.உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டுபருகற் கினிய பரங்கருணைத்
தடங்கடலைமருவித் திகழ்தென்னன்
Nalayira thivya pirabantham odi pogalama 5
நகை இல் முகத்தினான் = முகத்திலே ஒரு சிரிப்பே
கிடையாது. மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டான்
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் = கோபம் இல்லாமலே கூட கண்ணில் தீ
வரும் படி பார்ப்பான். அப்ப கோவம் வந்தால் எப்படி பார்ப்பானோ ?
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் = அந்த யமனும்
(கூற்றம் = யமன் ) அஞ்சும் படியான இடி இடிக்கும் படி உள்ள குரலை கொண்டவன்
ஐங்குறுநூறு - இது நம்ம ஆளு
அவன்: டேய், என் ஆளு வர்றாடா
நண்பன்: எங்கடா ?
அவன்: அதோ அங்க white and white பாவாடை தாவணியில்
நண்பன்: டேய், லூசாடா நீ ... எல்லாரும் தான் அந்த dressla இருக்காங்க... இது
ஒரு அடியாளமா ?
Nalayira thivya pirabantham odi pogalama 13
பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன்
கொன்றணங்கின்காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டிநேராகக்
கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்வாராமற் காக்கலா மாபாரதமென்றான்
கொஞ்சம் சீர் பிரிக்கலாம்:
பார் ஆளாக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று
அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைப் பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்வாராமற் காக்கலாம்
மாபாரதம் என்றான்
பொருள்:
பார் ஆளக் கன்னன் = கர்ணன் இந்த உலகை ஆள (இரண்டு
சுழி "ன்" போட்டால் கர்ணன்)
இகல் பார்த்தனை = பகைமை கொண்ட அர்ஜுனனை
முன் கொன்று = அதற்க்கு முன்னால் கொன்று
அணங்கின் = பாஞ்சாலியின்
காரார் குழல் களைந்து = கருமையான முடியை களைந்து
மொட்டை அடித்து
காலில் தளை பூட்டி = காலில் விலங்கு பூட்டி
நேராகக் கைப் பிடித்து = உன் கைகளையும் பிடித்து
நின்னையும் யான் கட்டுவனேல் = உன்னையும் நான்
கட்டினால்
வாராமற் காக்கலாம் மாபாரதம் என்றான் = இந்த மா
பாரதப் போர் வராமல் காக்கலாம் என்றான்
Nalayira thivya pirabantham odi pogalama Tamil 10
நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பெனும் மலையுள் அகப்படும் மலை
இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம்
பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
பேரே யுறைகின்ற பிர ¡ன் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே
சீர் பிரித்தபின்
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
பொருள்:
பேரே = திருப் பேரூர் என்ற ஊரில்
உறைகின்ற பிரான் = இருக்கின்ற பிரான்
இன்று வந்து = இன்று வந்து
பேரென் என்று = பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது
என்று சொல்லக் கேள்வி பட்டு இருக்கீர்களா)
Nalayira thivya pirabantham odi pogalama 8
தெள்ளேணங் கொட்டாமோ.பதம் பிரித்த பின்
உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு
பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
உருகி = உள்ளம் உருகி
பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து
உள்ளம் குளிர = உள்ளம் குளிர
முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து
பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான
பரங் கருணை = மேலான கருணை உடைய
தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை
மருவி = சேர்ந்து
திகழ் தென்னன் = பெருமை உடைய, சிறப்பு உடைய தென் நாட்டை சேர்ந்தவனான
சிவனின்
வார் கழலே = நீண்ட திருவடியை
நினைந்து அடியோம் = நினைத்து அடியவர்களாகிய நாம்
திருவை பரவி = அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம்
நாம் தெள்ளேணம் கொட்டாமோ = நாம் தெள்ளேணம் கொட்டாமோ
Nalayira thivya pirabantham odi pogalama 4
குகன் பார்க்க எப்படி இருப்பான் ?
அந்த முரட்டு உருவத்தை கூட கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.
தமிழ் படிக்க முடிந்ததற்காக மகிழ்வடையும் தருணங்கள் , கம்பனை படிக்கும்
தருணங்கள்
பொங்கி வரும் காதல். ஆணை இட்டாலும், அணை இட்டாலும் நில்லாது.
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்நாற்றம் மேய நகை
இல் முகத்தினான்,சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,கூற்றம் அஞ்சக்
குமுறும் குரலினான்.
ஊற்றமே = மிகுந்த ஊக்கத்தோடு, வலிமையோடு
மிக ஊனொடு மீன் நுகர் = ரொம்ப கறி மீன் எல்லாம் உண்டு . கறி மீன் எல்லாம் ரொம்ப
ஆர்வமா சாப்பிடுவான்.
நாற்றம் மேய = உடம்பு எல்லாம் ஒரு நாற்றம்
Nalayira thivya pirabantham Anbenum malayul Tamil
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான்
கார் ஏழ் = ஏழு மேகங்கள்
கடல் ஏழ் = ஏழு கடலும்
மலை ஏழ் = ஏழு மலைகளையும்
உலகும் = இந்த உலகை எல்லாம்
உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும்
ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை
அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே
வில்லிபுத்துராழ்வார் பாரதம் - மாபாரதம் வாராமல் காக்க
பாரதப் போருக்கு முன், கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த போரை
எப்படி தவிர்ப்பது என்று கேட்டான்.
தருமன்: அவர்களிடம் ஐந்து நாடு கேள், கொடுக்காவிட்டால் ஐந்து ஊர் கேள்,
அதுவும் கொடுக்காவிட்டால் ஐந்து வீடு கேள், சமாதனாமாய் போய் விடுவோம் என்றான்.
அர்ஜுனன்: Nothing doing, we want war என்றான்.
Nalayira thivya pirabantham odi pogalama Tamil 9
நாம் எல்லாம் கடல் பார்த்து இருக்கிறோம். அதில் உள்ள தண்ணீர் எப்படி
இருக்கும் ? ஒரே உப்பாய் இருக்கும். வாயில் வைக்க முடியுமா ? ஆனால் அந்த கடலே
குடிக்க இனிமையான நீரால் நிறைந்து இருந்தால் எப்படி இருக்கும் ? இறைவனின் அருள்
அப்படி அளவற்றதாய் கடல் நிறைந்த நல்ல தண்ணீரைப் போல இருக்குமாம்.
இன்னொரு அர்த்தம்.
நமக்குத் தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது.
அதில் உள்ள மீனுக்கு அது ஒண்ணும் கஷ்டமாய் இல்லை. அந்த நீரை குடித்து, சுவாசித்து
உயிர் வாழ்கிறது. அது போல் இறைவனின் கருணையில் மூழ்கி திளைக்கும் பக்தர்களுக்கு
அந்த நீர் வாழ்வாதாரம். அந்த கடலில் மூழ்காமல் கரையில் நின்று கொண்டு தர்க்கம்
பண்ணி கொண்டு இருப்பவர்களுக்கு அது உப்பு நீர்.
சொலறத சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.
Nalayira thivya pirabantham odi pogalama 6
அவன்: கைல வளையல பாருடா
நண்பன்: டேய், உனக்கு நேரம் செரியில்ல...காலங்காத்தால வெறுப்பு ஏத்தாத
....
அவன்: சரி, சரி...அந்த கும்பல்ல அழகா சிரிசிகிட்டு வர்றா பாரு, அவ தான் என்
ஆளு
நண்பன்: சரிதான், முத்தி போச்சு காதல் கிறுக்கு, ஐயா சாமி என்னைய
விடு...இதுக்கு மேல இருந்தா, என் மண்டை காஞ்சிரும்
இப்படி, ஒரு பொத்தாம் பொதுவாய் அடையாளம் காட்டும் காதலனை ஐங்குறு நூறில்
காட்டுகிறார் அம்மூவனார்
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளேஅலங்கு இதழ் = அசைகின்ற இதழ்
நெய்தல் = நெய்தல் மலர்கள் நிறைந்த
கொற்கை முன் துறை = கொற்கை கடற் கரையில்
இலங்கு முத்து = ஒளி பொருந்திய முத்துக்கள்
Nalayira thivya pirabantham odi pogalama 3
கொத்தளமாக்கி பரக் கழித்து = பெண்களின் மனத்
திண்மையை உடைத்து (கொத்தளமாக்கி), குடி கெடுத்து (பரக் கழித்து )
குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற = குறும்பு
செய்யும் பையனைப் பெற்ற
நந்த கோபாலன் = நந்த கோபாலன்
கடைத்தலைக்கே = வீட்டு வாசலுக்கே
நள் இருட்கண் = நடு நிசியில்
என்னை உய்த்திடுமின் = என்னை கொண்டு போய் விட்டு
விடுங்கள்
ஏன் நடு இராத்திரி போக வேண்டும் ? காலையில போகலாமே ?
நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாமே ?
ஹுஹும் ... இப்பவே போகணும் அவன் கிட்ட. அது
வரைக்கும் எல்லாம் பொறுக்க முடியாது
கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து
எங்கும்
காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின்
றனரே
என்று சொன்னார் போலே.