read.cash Log in
@ChemRaj

Ravananin puthira thavam Tamil 2

அவள் தரையையை மிதித்து நடக்கிறாள். அதில் தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா ? அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும். அவ்வளவு தூரம் அவள் கால் உள்ளே போகிறது. அப்பா அவள் உடல் எப்படி இருக்கும். அவள் வரும்போது, அனல் கக்கும் கண்ணை உள்ள எமனும், ஏதாவது குகைக்குள் சென்று ஒளிந்து கொள்வானாம் அவள் நடந்து வரும் போது அவள் பின்னால் மலைகள் எல்லாம் தடம் புரண்டு, உருண்டு பிரண்டு வருமாம். எவ்வளவு பிரமாண்டமான உருவம்? பொருள்: சிலம்புகள் = சிலம்பு என்றால் மலை என்று ஒரு பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இதை வைத்து ஒரு அருமையான இடம் உண்டு. சிலம்பிடை = அப்படி மலைகள் அவளுடைய சிலம்பில் (கொலுசில்) செறித்த கழலோடும் = அடர்ந்த (நிறைய மலைகளை போட்டு வைத்து இருக்கிறாள்) காழலோடும் நிலம் புக மிதித்தனள் = கால் நிலத்துக்குள் போகும் படி மிதித்தாள் நெளித்த குழி = அப்படி மிதித்தபோது

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.