Nalayira thivya pirabantham odi pogalama Tamil 10
நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பெனும் மலையுள் அகப்படும் மலை இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பேரே யுறைகின்ற பிர ¡ன் இன்று வந்து பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும் ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே சீர் பிரித்தபின் பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே பொருள்: பேரே = திருப் பேரூர் என்ற ஊரில் உறைகின்ற பிரான் = இருக்கின்ற பிரான் இன்று வந்து = இன்று வந்து பேரென் என்று = பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது என்று சொல்லக் கேள்வி பட்டு இருக்கீர்களா)
2 comments
இகல் பார்த்தனை பகைமை கொண்ட அர்ஜுனனை முன் கொன்று அதற்க்கு முன்னால் கொன்று
Keep writing...sometimes try in english friend..