read.cash Log in

@KingTamil

Joined 7 May 2020 · 101 posts

120 KT

0 KT · $3.44 received · 0 KT · $1.63 given

Posts

@KingTamil

Karu Kurunaval Tamil Part 17 சட்டென்று பக்கவாட்டில் மலைச்சரிவில் பாறைகள் உருண்டு வரத்தொடங்கின. எருமைகள் குளம்போசையுடன் மலையிறங்கி வருவதாகத் தோன்றியது. அவர்கள் கூச்சலிட்டுச் சிதறினர். அலறியபடி முட்டிமோதினர். அவர்கள் மேல் மலைப்பாறைகள் பொழிந்தன. வணிகர்களில் பலர் நசுங்கி இறந்தனர். பனிப்பரப்பெங்கும் ரத்தம் தெறித்தது. ரத்தமணம் சூசன்ன்னாவை அலறச் செய்தது. மேலிருந்து கூச்சலிட்டபடி ஈட்டிகளும் வாள்களுமாக கொள்ளையர் இறங்கி வந்தனர். அவர்கள் வந்த வேகம் நம்பமுடியாததாக இருந்தது. அவர்களின் கால்கள் பட்டு உருண்ட பாறைகள் பாதையில் மழையாக விழுந்தன. அவற்றுடன் அவர்களும் குதித்தனர். பெட்ரூஸ் “சூசி, வேறுவழியில்லை. நம் குதிரைகளுடன் நாம் தப்புவோம்…” என்று கூவினார். அவர்களில் ஒருவனைச் சுட்டார். அவன் உருண்டு விழ அவன்மேல் பாறைகள் உருண்டன.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 16 அதன்பின்னரே அவள் மலையின் சரிவான விளிம்பில் நின்றிருந்த கரிய உடை அணிந்த மனிதனைப் பார்த்தாள். அவன் கையில் நீண்ட ஈட்டியை வைத்திருந்தான். யாக்கின் தோலால் ஆன மயிராடையை அணிந்திருந்தான். அவன் முகம் தெரியவில்லை. ஒரு யாக் எழுந்து நின்றதுபோல தோன்றினான். “கொள்ளையர்! கொள்ளையர்!” என்று காவலர்கள் கூவினர். வாள்களையும் ஈட்டிகளையும் உருவிக்கொண்டனர். அவர்களிடம் இருந்தது ஒரே துப்பாக்கி. அதில் அவர்கள் குண்டு நிறைத்தனர். பெட்ரூஸ் தன் துப்பாக்கியில் குண்டு நிறைத்தார். அந்த முதல் மனிதன் கையை தூக்கினான். அவனருகே மேலும் கொள்ளையர் தோன்றினார்கள். பதினைந்து பேருக்குமேல் இருக்கும். அவர்கள் பெருகி நிறைந்து கொண்டிருப்பதாக தோன்றியது. அவர்களை நோக்கி மிகமெல்ல வணிகக்குழு முன்னேறியது.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 13 ஆட்சியாளர் மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டார். அவர்கள் எந்நிலையிலும் எதற்காகவும் தடைசெய்யப்பட்ட நகருக்குள் நுழைய முடியாது. அந்தப் பாதையில் செல்வதற்கே அனுமதி இல்லை. நாக்சுவிலிருந்து அப்படியே திரும்பிவிடவேண்டியதுதான். அவர்கள் ஒருவாரகாலம் அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உரிய உணவும் பிற பயணப்பொருட்களும் வழங்கப்படும். நாக்சுவிலிருந்து ஒரு வணிகர்குழு கீழே காங்க்டிங் என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது. அக்குழுவுடன் அவர்களிருவரையும் அனுப்பிவைக்க அவர் முடிவெடுத்தார். அவர்களுக்கு உதவியாக நாக்சுவிலிருந்து இரண்டு திபெத்திய வழிகாட்டி வீரர்களையும் அனுப்பி வைத்தார். செல்லும் வழியில் அவர்களுக்கு உதவட்டும் என்று திபெத்திய வெள்ளிக் காசுகளையும் அளித்தார்.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 12 ஆனால் அப்போது அவள் மிகவும் களைத்திருந்தாள். அரைத்தூக்கத்தில் இருந்தாள். அவளால் அவனை வெறுமே வெறித்துப் பார்க்கத்தான் முடிந்தது. அவன் புன்னகைத்துக் கொண்டே கடந்துசென்றான். நாக்சு நகரின் ஆட்சியாளர் அவர்கள் லாசா செல்லக்கூடாது என்று ஆணையிட்டார். அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆட்சியாளரின் மாளிகையிலேயே ஒரு சிறிய அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். மென்மயிர் கம்பிளித்தரையும், யாக்கின் தோலால் ஆன சுவர்களும் கொண்ட அந்த வெம்மையான அறை விண்ணுலகில் இருப்பதுபோல அவர்களுக்கு தோன்றியது. உலர்ந்த இறைச்சி போடப்பட்ட மக்காச்சோளக் கஞ்சியை குடித்து, தொடர்ச்சியாக இரண்டுநாட்கள் தூங்கி விழித்த பின்னர் அவர்கள் முழுமையாக மீண்டுவந்தனர்.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 8 அவன் அந்த வழியாகச் சென்றான்… அவன் இங்கே எங்கோ அருகில் இருப்பவன்” அப்போதுதான் அவள் அவனுடைய தோற்றத்தை நினைவுகூர்ந்தாள். “அவன் முறையான குளிராடைகள் கூட அணிந்திருக்கவில்லை.” பெட்ரூஸ் அவளை கூர்ந்து நோக்கி “சொல், அவன் எப்படி இருந்தான்?” என்றார். “அவன் வெள்ளையன்… “ என்ற சூசன்னா “அவன் எனக்கு அறிமுகமான முகம் கொண்டிருந்தான்” என்றாள். பெட்ரூஸ் புன்னகைத்து “சரி… நாம் கிளம்புவோம். நீ பிராந்தியை குடி… இந்த ஒரு மிடறு மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது” என்றார். அவள் அந்த பிராந்தியை வாயில் நெடுநேரம் வைத்திருந்து மெல்ல மெல்ல உள்ளே இறக்கியபின் கையூன்றி எழுந்துகொண்டாள். “பேட், எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது… அதுதான் வழி. அந்த இளைஞன் வழிகாட்டியிருக்கிறான்… செல்வோம்.”

@KingTamil

Karu Kurunaval Tamil Part 14 செப்டெம்பர் ஆறாம் தேதி அவர்கள் கிளம்பியபோது கடுமையான பனிப்புயல் வீசியது. அது ஓய்வதற்காக காத்து நின்றிருந்தனர். அதன்பின் கிளம்பி நகரிலிருந்து வெளியே சென்றபோது அத்தனை கட்டிடங்களிலும் சுவரோரமாக மலைமலையாக பொருக்குப்பனி குவிந்து கிடந்தது. செத்த மீன் போலிருந்தது நாக்சு நகரம். வெள்ளி மின்னிய அதன் தெருக்களில் இருந்து அழுகல்வாடை எழுந்தது. அவர்கள் நகரிலிருந்து வெளியேறும்போது பனித்துகள்கள் பறந்துகொண்டிருந்த சாலையோரத்தில் சூசன்னா மீண்டும் அந்த வெள்ளை இளைஞனைக் கண்டாள். அவள் பரபரப்புடன் “அதோ, அதோ அவன்” என்று சுட்டிக்காட்டினாள். ஆனால் பெட்ரூஸ் பார்ப்பதற்குள் பனிப்படலத்தை தூக்கி அனைத்தின் மேலும் திரையென இறக்கியது காற்று.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 9 பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவளை தூக்கி குதிரையில் ஏற்றினார். அவரும் ஏறிக்கொண்டார். ஆனால் அந்த மலைப்பிளவை அடைந்ததும் அவர் நேராகச் சென்றார். சூசன்னா கூச்சலிட்டாள். “பேட் என்ன செய்கிறீர்கள்? இதுதான் வழி… இதுதான்…” அவர் “நீ மனம் குழம்பிவிட்டாய்… பிரமைகள் வரத்தொடங்கிவிட்டன… அது மலையுச்சியின் விளிம்பு. அந்தப்பக்கம் நீயே பார், மேகம் நின்றிருக்கிறது.” “பேட் அதுதான் வழி… அதுதான். எனக்கு தெரியும். அந்தப் பையன் காட்டிய வழி அதுதான்.” “பேசாமல் வா” என்று பெட்ரூஸ் அதட்டினார். சூசன்னா சட்டென்று குதிரையை தட்டிச் செலுத்தி விசைகூட்டி அந்த மலைப்பிளவு நோக்கிச் சென்றாள். குளம்படி ஓசை எழுந்தது. மணலும் கூழாங்கற்களும் தெறித்தன.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 6 ஆச்சரியமாக அவன் ஒரு வெள்ளையன். இருபது வயதான இளைஞன். நீண்ட சிறிய முகம். கோடு போன்ற உதடுகள். பச்சைக்கண்கள். சிவப்புத் தலைமயிர். அவன் அருகே வந்து புன்னகைத்தான். சூசன்னா பதற்றத்துடன் “உதவி… உதவி நாங்கள் இங்கே சிக்கிக் கொண்டிருக்கிறோம். வழிதவறிவிட்டிருக்கிறது.. நீ ஆங்கிலம் பேசுவாயா? பிரெஞ்சு?” என்றாள். அவன் புன்னகைத்து சொல்லுங்கள் என்பதுபோல தலையசைத்தான். “அருகே எங்கே கிராமம் இருக்கிறது? எங்கே நாங்கள் செல்லவேண்டும்?” அவன் தெற்கே செல்லும் ஒரு சிறிய மலையிடுக்கைச் சுட்டிக்காட்டினான். “நீ என்ன செய்கிறாய் இங்கே? நீ யார்? இங்கே ஏதாவது மலையேற்ற முகாமில் இருக்கிறாயா?”

@KingTamil

Karu Kurunaval Tamil Part 4 சூசி , நீ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் எனக்கு நானே கூட ஒரு பொருட்டு அல்ல… அதனால் நீ சொல்வதெல்லாம் சமன்படுத்தப்பட்டு விடுகிறது” என்றார் பெட்ரூஸ். அவரைப் பார்த்து சூசன்னா புன்னகைத்தாள். அப்போது போல அவருக்கு மிக அருகே, மிகமிக இணக்கமாக அவள் தன்னை உணர்ந்ததே இல்லை. அவர் கையை பற்றியபடி “நான் உன்னை காதலிக்கிறேன் பேட்” என்று அவள் சொன்னாள். பெட்ரூஸ் புன்னகைத்தார். ‘ஏனென்றால் நீ சாத்தான்” பெட்ரூஸ் கண்களில் நீர் படர சிரித்தார். எனக்கு சற்று நீர் வேண்டும்… பிராந்தி இருக்குமென்றால் அது” என்றாள் பெட்ரூஸ் திரும்பி பார்த்தபோது அவருடைய குதிரை மெல்ல நடந்து மிக விலகிச் சென்றுவிட்டிருந்ததைக் கண்டார். அதன்மேல் பொதிகள் இருந்தன

@KingTamil

Karu Kurunaval Tamil Part 2 ஓர் இடத்தில் சூசன்னா கீழே விழுந்துவிட்டார். மேலே செல்வதற்கான உடலாற்றலை இழந்திருந்தாள். அதைவிட உள்ளம் நம்பிக்கை இழந்திருந்தது. பெட்ரூஸ் அவளை ஆறுதல்படுத்தி கூட்டிக்கொண்டு செல்ல முயன்றார். “இங்கே இப்படி விழுந்து கிடந்தால் நாம் செத்துவிடுவோம்” என்று பெட்ரூஸ் சொன்னார். “இங்கிருந்து நடந்தாலும் நாம் உயிர்பிழைக்கப் போவதில்லை. நம்மிடம் ஒருநாளுக்குரிய உணவே உள்ளது… கண்ணுக்கெட்டிய தூரம்வரை எவரும் இல்லை.” “அருகே எவரேனும் இருப்பார்கள், பார்போம்” என்றார் பெட்ரூஸ். “மனிதர்கள் இருந்தால் வானத்தில் ஒரு பறவையாவது தென்படும்.. இல்லை, இது சூனியமான பனிவெளி… இங்கே எவருமே இல்லை” என்று சூசன்னா சொன்னாள். “நாம் கடைசிவரை முயலவேண்டும் சூசி… அதை நாம் பலமுறை பேசியிருக்கிறோம்.”

@KingTamil

Karu Kurunaval Tamil Part 10 நில், சூசி, நில்!” என்று கூவியபடி பெட்ரூஸ் அவளுக்குப் பின்னால் குதிரையில் வந்தார். குதிரை அந்த மலைப்பிளவை அடைந்து அப்பால் சென்று மேலும் ஏறி ஒரு பாறையை அடைந்து நின்றுவிட்டது. மெய்யாகவே அதற்கப்பால் ஆழமான மலைப்பள்ளம். அவள் அதன்மேல் அமர்ந்தபடி மூச்சிரைத்தாள். ஏதோ கெட்ட கனவு முடிந்ததுபோல் தோன்றியது. ஆனால் மிக ஆழத்தில் மலையின் மடிப்பில் ஒரு சிறு கூட்டத்தை அவள் பார்த்தாள். திபெத்திய படைவீரர்கள். அவர்கள் அவளை பார்த்துவிட்டனர். அவர்கள் வானை நோக்கிச் சுட்டனர். மலையில் டப் டப் டப் டப் என அந்த ஓசை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிறிய வெண்ணிற லில்லி போல அங்கே அந்த வேட்டின் புகை தெரிந்தது.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 7 அவன் ஏதும் சொல்லாமல் தலைவணங்கி முன்னால் சென்று மறைந்தான். அவள் அவனை பதைப்புடன் பார்த்திருக்கையில் பெட்ரூஸ் கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி வந்தார். “இது சலிப்புற்றிருக்கிறது. நம்மை விட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறது” என்றார். “பேட், நாம் செல்லவேண்டிய வழி அது. அந்த மலைப்பிளவு…” “அதற்கப்பால் வழி இல்லை… அது செங்குத்தான மலைவிளிம்பு” என்றார் பெட்ரூஸ் “இந்தவழியாகச் செல்வோம்… நமக்கு வேறுவழியில்லை.” “இல்லை, அதுதான் வழி. இங்கே இப்போது ஒர் இளைஞன் வந்தான். அவன் அந்த வழியை எனக்குச் சுட்டிக்காட்டினான்.அவன் இங்கேயே இருப்பவன், அவனுக்கு தெரிந்திருக்கும்.” “உளறாதே… இங்கே எவர் வரமுடியும்? வந்தால் அவன் எங்கே?”

@KingTamil

Siru ponmani asaikindra Tamil 9 எசிலி கிழவி ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். “படுத்தா எந்திரிக்கோம். செத்தா உயிர்த்தெழுதோம்… நினைச்சு நினைச்சு அளுதா ஆச்சா? நான் சொல்லுத ஆரு கேக்கா? போடீ கிளவீங்குதாக” ஆனால் அவளுடைய குரல்தான் அந்த வீட்டை உயிருடன் வைத்திருந்தது. லாசர் சிறுநீர் கழிக்க எழுந்தான். கால்கள் தடுமாறின. சுவரைப் பிடித்தபடி நடந்து வெளியே சென்றான். அவனை கண்டதும் விடலிப்பனைக்கு அப்பாலிருந்து ஜான்சன் சீழ்க்கை அடித்தான். அவன் திரும்பிப் பார்த்தான். அவனருகே வந்த ஜான்சன் “ஏல, அந்த வண்டு என்னாச்சுலே? குட்டி போட்டுதா? பாத்தியா?” என்றான். லாசர் அதை மறந்தே போயிருந்தான். “இல்லே, பாக்கல்லே” என்றான். “எங்க வச்சே?” என்றான் ஜான்சன். “அந்த வண்டு ஆருக்கதுன்னு நான் கண்டுபிடிச்சாச்சு. அது பெரிய சாமியாரு வளக்குத வண்டாக்கும்” “அவரு வளக்குததா? ஆரு சொன்னா?” என்று லாசர் கேட்டான்.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 20 உதவி உதவி!” என்று அவள் கூவினாள். “உதவி! என் கணவர் மறுபக்கம் சென்றிருக்கிறார்…” அவன் அவளை அணுகி அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கி “செல், அவர் இறந்துவிட்டார்” என்றான். “என்ன சொல்கிறாய்?” “சென்றுவிடு… அவர் இறந்துவிட்டார். பனிப்புயல் அணுகிக்கொண்டிருக்கிறது.” “நான் எப்படிச் செல்வது?” “என்னுடன் வா.” அவள் அவனை கூர்ந்து பார்த்தாள். “நீ யார்? ஏன் இங்கே இருக்கிறாய்?” அவன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவள் குதிரையில் ஏறி அவனை தொடர்ந்து சென்றாள். “சொல், யார் நீ? ஏன் இங்கே இருக்கிறாய்?” அவன் ஒன்றும் சொல்லவில்லை அவள் குரலை கேட்டதாகவே தெரியவில்லை. “நீ என் குடும்பத்தின் முகம் கொண்டிருக்கிறாய்.” அவன் திரும்பியே பார்க்கவில்லை. அவன் பேசப்போவதில்லை என்று தெரிந்தது

@KingTamil

Karu Kurunaval Tamil Part 19 வேண்டாம் நீ இங்கே நில், நான் இந்த ஆற்றை கடந்து அப்பால் சென்று அங்கே என்ன என்று பார்த்து வருகிறேன்…” என்றார் பெட்ரூஸ் “இங்கே நின்றிரு…” அவர் பாறைகள் வழியாகத் தாவி அப்பால் சென்றார். அவள் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். நெடுநேரமாகியது. இருட்டத் தொடங்கியது. அவர் அங்கிருந்து வரப்போவதில்லை என்று தோன்றியது. ஆற்றைக் கடந்து சென்று என்ன நடந்தது என்று பார்க்கவேண்டும் என்று அவள் முடிவெடுத்தபோது அவளுக்குப் பின்னால் காலடியோசை கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த இளைஞன். அவன் நாக்சேயில் இருந்து அத்தனை தொலைவு வந்திருக்கிறானா?

@KingTamil

Karu Kurunaval Tamil Part 18 அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். அது வணிகப்பாதை என்பதனால் ஆங்காங்கே இரவு தங்குவதற்கான இடங்கள் இருந்தன. அவை பளிச்சிடும் செம்மஞ்சள் கொடிகளால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன. செப்டெம்பர் 26 ஆம் தேதி அவர்கள் ஒரு வழிமுனையைச் சென்றடைந்தனர். இரண்டு பாதைகள் அங்கே பிரிவதுபோல தோன்றியது. இரண்டில் எதை தெரிவுசெய்வது என்று தெரியவில்லை. அவர்கள் அங்கே திகைத்து நின்றனர். பெட்ரூஸ் அப்போது தொலைவில் ஒரு புகையை கண்டார். அது ஓர் ஆற்றுக்கு அப்பால் எழுந்தது. அது போ-சு என்னும் ஆறு. “அது புகைதானா?”என்றார் “அல்லது மேகமா?” “புகையேதான்… நாம் அங்கே செல்வோம்”

@KingTamil

Karu Kurunaval Tamil Part 18 அவர்கள் அலறியபடி விலக அந்த இடைவெளி வழியாக சூசன்னாவும் பெட்ரூஸும் குதிரைகளை செலுத்தி ஊடுருவிக்கடந்து முன்னால் சென்றனர். பின்பக்கம் அவர்கள் அந்த வணிகக்குழுவினரை கொன்று பொருட்களைச் சூறையாடும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன நெடுந்தொலைவு சென்றபின்னரே அவர்கள் மீளமுடிந்தது. சூசன்னா அழுதுகொண்டிருந்தாள். பெட்ரூஸ் “நல்லவேளை நாம் தப்பினோம்” என்றார். அவர்களுக்கு மேலே செல்ல வழி தெரியவில்லை. அந்தப்பாதையில் முன்னேறிச் செல்வது தவிர வேறு வழியே இல்லை. அவர்களிடம் இருந்த உணவு பத்து நாட்களுக்கு போதுமானது. வேண்டுமென்றால் மேலும் இரண்டுநாட்கள் கூட்டமுடியும். அதற்குள் அவர்கள் எவரையாவது சந்தித்தாக வேண்டும். ஆனால் வழிகாட்டிகள் இல்லை, வழியின் வரைபடங்கள் இல்லை, அந்த நிலம் பற்றிய எந்த செய்தியும் இல்லை.

@KingTamil

Karu Kurunaval Tamil Part 15 செல்லும்போது அவர்களை ஊக்கிய அனைத்தும் வடிந்துவிட்டிருந்தன. உள்ளம் சோர்வை பெருக்கிக்கொண்டது. சோர்வு தளர்வை, தளர்வு துயிலை உருவாக்கியது. அவர்களுக்குமேல் பனிப்பொழிவு வெண்ணிற துகள்களாக விழுந்துகொண்டிருந்தது. குதிரைக்குளம்படிகளை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். செப்டெம்பர் 17 ஆம் தேதி அவர்களின் பயணக்குழுவை பனிவெளிக் கொள்ளையர் தாக்கினார்கள். அரைத்தூக்கத்தில் குதிரைமேல் அமர்ந்திருந்த சூசன்னா சுற்றிலும் எழுந்த கலைந்த ஓசைகளை கேட்டு கண்விழித்தாள். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவளுடன் வந்துகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் வானை நோக்கி வேட்டு போட்டான். அந்த ஓசையை மலைகள் முழக்கமிட்டன. புகை காற்றில் வெண்ணிறத் துணிச்சுருள் போல அசைவில்லாமல் நின்றது

@KingTamil

Karu Kurunaval Tamil Part 11 பெட்ரூஸ் “நல்லவேளை” என்றார். “நான் சொன்னேனே, அவன் வழிகாட்டியிருக்கிறான்” என்றாள். “அவனுக்கு அவர்கள் அங்கே இந்நேரம் செல்வார்கள் என்று எப்படித் தெரியும்?” என்றார் பெட்ரூஸ். “அவன் அறிந்திருக்கிறான்… மிகச்சரியாக அறிந்திருக்கிறான்.” பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை. ஒருமணிநேரத்தில் அவர்களை திபெத்தியப் படை சூழ்ந்துகொண்டது. அவர்கள் வந்துகொண்டிருப்பதை கீழிருந்து வேட்டு வழியாக மேலே அறிவித்தனர். வேட்டுக்கள் வழியாக பேசும் ஒரு மொழி அவர்களுக்கு இருந்தது. மேலிருந்த படை இறங்கிவந்தது. அவர்களுக்கு உணவும் நீரும் அளித்த திபெத்தியப் படை நாக்சு நகருக்கு அழைத்துச் சென்றது. நாக்சு நகருக்குள் நுழையும்போது சூசன்னா அந்த இளைஞனை மீண்டும் கண்டாள். அவன் நகரின் தெருவிலிருந்து

@KingTamil

Karu Kurunaval Tamil Part 5 நான் அதை கட்டாமல் வந்துவிட்டேன்… இரு” என்று அவர் அதன்பின் சென்றார். அவர் வருவதைக் கண்டதும் அது விரைந்து நடக்கத் தொடங்கியது. சூசன்னா கண்களை மூடிக்கொண்டு மூச்சிரைத்தபடி பாறையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பனியின் குளிர் உடலில் காய்ச்சலாக வெளிப்பட்டது. அந்த வெப்பத்தில் நெற்றியும் கண்களும் கொதித்தன. அவள் கண்களை திறந்தபோது நீர்ப்பிம்பம்போல அலைபாய்ந்த காட்சியில் ஒருவன் மலைச்சரிவில் இறங்கி வருவதைப் பார்த்தாள். “யார்? அது யார்?”என்றாள். அவள் அருகே எவரும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவன் மிகமெல்ல மலைச்சரிவில் இறங்கி வளைந்து அவளை நோக்கி வந்தான்.

@KingTamil

Karu Kurunacval Tamil Part 1 முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான். சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் உச்சியில். அவர்கள் தன்னந்தனியாக அந்த மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தனர். ஓரிரு நாட்களுக்கே அவர்களிடம் உணவும் நீரும் இருந்தது. சுற்றிலும் மானுடவாழ்க்கைக்கான எந்த தடையத்தையும் அவர்கள் காணவில்லை. அவர்கள் தனித்து, களைத்து, உயிரின் துளி மட்டுமே உடலில் எஞ்ச நடந்து கொண்டிருந்தனர்.

@KingTamil

Sithada kattikitu singaram Tamil 2 ஏம்லே சத்தமே கேக்கல்ல?” என்றான் ஜான்சன் “ஆமா, சத்தமே கேக்கல்ல” என்று லாசர் சொன்னான். ஜான்சன் “செத்துப்போச்சுலே” என்றான் ஜான்சன். “செத்துப்போச்சா?” என்று லாசர் கேட்டான். “பாருலே, அதுக்க கொடுக்கு செத்திருக்கு” லாசர் கூர்ந்து பார்த்தான். மெய்யாகவே அது செத்துவிட்டிருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது. ஜான்சன் சட்டியிலே எடுத்திருக்கப்பிடாதுலே” என்றான். “சட்டியிலே எடுத்தோம்ல, அதனாலேதான் செத்துப்போச்சு”.என்றான் லாசர். ஜான்சன் “நான் எடுக்கல்லே” என்று ஜான்சன் சொன்னான். லாசரை நோக்க்கி கைசுட்டி “’நீதான் எடுத்தே” என்றன். லாசர் ‘ஆமா, நாந்தான் எடுத்தேன்” என்றான். “நான் வேண்டாம்னாக்கும் சொன்னேன்” என்றான் ஜான்சன்.

@KingTamil

Sithada kattikitu singaram Tamil End லாசர் திரும்பி நோக்கியபோது வாசலில் ஜான்சன் நிற்பதைக் கண்டான். அவன் பாதியுடல் மறைந்து நின்றிருந்தான். பெரியசாமியார் திரும்பியபோது லாசர் கைகூப்பினான். அவர் அவனை நோக்கி புன்னகைத்து “பாரு, உயிர்த்தெழுதல் நடந்தாச்சு” என்றார் லாசர் போவதற்குள் ஜான்சன் முன்னால் சென்று அந்த வண்டைப் பார்த்தான். அது மீண்டும் டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டது. அதன் உணர்கொம்பு அசைந்துகொண்டிருந்தது “சீவன் வந்தாச்சு” என்று ஜான்சன் சொன்னான். “நானாக்கும் இவன்கிட்ட சொன்னது, கொண்டுபோயி பெரிய சாமிகிட்ட குடுலே, அவரு சீவன் குடுப்பாருண்ணு” லாசர் “ஆமா, இவனாக்கும் சொன்னது” என்றான் “ஜெபம் செய்வோம்” என்றார் பெரிய சாமியார். லாசர் மண்டியிட்டான். ஜான்சன் அவனருகே மண்டியிட்டு அமர்ந்துகொண்டு சுற்றும் பார்த்தான். லாசரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. பெரியசாமியாரும் மண்டியிட்டார். “பரமண்டலங்களை ஆளும் என் பிதாவே, அருமைக்குமாரனே, ஆவியானவரே, மானுடரின் பாடுகளை தேவனே நீர் அறிவீர். எல்லா கண்ணீருடனும் உன் கைகளும் உடனிருக்கிறதல்லவா என் ஆண்டவனே! எல்லா இல்லங்களிலும் உன் காவல் அமைகிறதல்லவா என் மீட்பனே! எங்கள் ஆத்மாக்களை தொட்டு உயிர்த்தெழவைக்கும் தூயநீர் அல்லவா உன் சொல்!”

@KingTamil

Karu Kurunaval Tamil Part 3 ஆமாம், இதுதான் என் கடைசி எல்லை… இனி நான் அமைதியாக என் தேவனிடம் என்னை அளிக்க நினைக்கிறேன்.” பெட்ரூஸ் என்ன செய்வது என்று அறியாமல் அவள் அருகே அமர்ந்திருந்தார். அவருக்குள் துயரமும் எரிச்சலும் நிறைந்திருந்தது. சூசன்னா ”நீங்கள் என்னை விட்டுவிட்டுச் செல்லலாம் எனக்கு அதில் வருத்தமில்லை என்று புன்னகையுடன் சொன்னாள். “அதெப்படி போகமுடியும்?” என்றார் பெட்ரூஸ். “இந்த வெறுமையின் வெளியில் பொய்யும் உண்மையும் ஒன்றுதான்” என்று சூசன்னா சொன்னாள். “நான் அறிவேன், உங்களுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.”பெட்ரூஸ் அதை மறுக்கவில்லை. “உங்களுக்கு எந்த மனிதரும் ஒரு பொருட்டல்ல. மெய்யான தேவனே கூட பொருட்டல்ல” என்று மீண்டும் சூசன்னா சொன்னாள். அப்படிச் சொல்லும்போது வலுவான ஒரு மறுப்பை எதிர்பார்ப்பது மனித வழக்கம், ஆனால் அவள் அப்படி எதிர்பார்க்கவில்லை.

@KingTamil

Siru ponmani asaikindra Tamil 8 சபை கலைந்தபோது வேதம் வாத்தியார் “அமைதி அமைதி” என்றார். “ஏட்டி அந்தபிள்ளைய வெளியே கொண்டுபோ” என்று ஆணையிட்டார். மறுநாளே லாசர் குணமாகிவிட்டான். அவன் வாய் மட்டும் கசந்தது.கைகால்களில் கடுமையான ஓய்ச்சல் இருந்தது. அது இனிமையாகவும் தோன்றியது. கண்களை திறந்தபோது ஒளி கூசி கண்ணீர் வழிந்தது. அவன் சுருண்டு பாயில் படுத்துக்கொண்டான். காதில் தொலைவிலுள்ள ஓசைகள் கூட கேட்டுக்கொண்டிருந்தன வீட்டில் சமையல்வேலை அனைத்தையும் எசிலிக்கிழவிதான் செய்தாள். அம்மா எதையுமே செய்யாமல் பின்திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள். அப்பா பனையேறப் போகவில்லை. பத்துநாள் அவர் பனையேற வேண்டியதில்லை என்றும். அவருடைய கூறு பனைகளை மற்றவர்கள் பங்கிட்டு ஏறிக்கொள்வது என்றும் முடிவுசெய்திருந்தார்கள்.

@KingTamil

Siru ponmani asaikindra Tamil 4 அவன் அவர் பெயரை பலமுறை சொல்லிப் பார்த்ததுண்டு. அவன் நாவில் அவர் பெயர் வருவதில்லை. சாமுவேல் மாதிரி. வறுவேல் மாதிரி ஒரு விசித்திரமான பெயர். ஆனால் ஜான்சன் தெளிவாகவே சொல்லிவிடுவான். ராபர்ட் கால்டுவெல். அவனால் சொல்லமுடியாத ஒன்றும் இல்லை. ஜான்சன் எல்லாவற்றையும் எப்படியோ அறிந்திருந்தான். பெரிய சாமியார் கைகாட்ட மரியான் எழுந்து பைபிளை வாசித்தார். அவன் குரல் உரக்க ஒலித்தது. திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.

@KingTamil

Sithada kattikitu singaram Tamil 5 நீ போ…நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன். “நான் போறேன்” என்று லாசர் சொன்னான். “நீ என் பேரச் சொன்னா நான் உன்னை கல்லால அடிப்பேன்” என்றான் ஜான்சன். “சொல்லமாட்டேன்” என்று லாசர் சொன்னான் அவன் பெரியசாமியாரின் வீட்டை அடைந்தான். பெரியசாமியாரின் மனைவி வெளியே போர்வைகளை காயப்போட்டுக்கொண்டிருந்தாள். வேலைக்காரப்பெண் உதவி செய்தாள். அவளிடம் சென்று பெரிய சாமியாரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்கலாமா? வேண்டாம். நேராக அவரிடமே சென்றுவிடலாம் அவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு சென்றான். அவர்களின் கூரைவீடுகளை விட பலமடங்கு உயரமான வீடு. பெரிய வெள்ளைச் சுவர்கள். அவர்களின் வீடும் திருக்கோயில் போலவே இருந்தது. அவன் பெரிய சாமியாரின் அறையை கண்டான். அவர் ஒரு மேஜைமுன் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

@KingTamil

Siru ponmani asaikindra Tamil 7 அவன் வாசித்து நிறுத்தியதும் பெரிய சாமியார் கைகூப்பி “பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே” என்றார். சபை ரீங்காரமிட்டது. “நம்புங்கள், இறந்து மீண்டும் உயிர்த்தெழாமல் எவரும் தேவனை அடைவதில்லை. இறப்பு என்பது ஒரு குளியல். இறப்பு என்பது ஒரு வாசல். இறப்பினூடாகவே நாம் மெய்யான தேவனை அடைகிறோம். அவருடைய ஆணையாலே நாம் உயிர்த்தெழுவோம்” என்றார். லாசருக்கு கடுமையாக குளிர்ந்தது. அவன் முனகியபடி எழமுயன்று சுருண்டு விழுந்தான். அவன் உடலில் இருந்து சூடாக சிறுநீர் சென்றுகொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். “குட்டி குட்டி” என்று அவன் கூவினான். “குட்டி இங்க நிக்கா… எனக்க குட்டி இங்க நிக்கா!”

@KingTamil

Sithada kattikitu singaram Tamil 6 அவன் வாசலில் மறைந்து நின்றான். அவர் இறகுப்பேனாவால் நத்தைவடிவப் புட்டிக்குள் இருந்து நீலநிற மையை தொட்டுத் தொட்டு எழுதினார். நீலநிற கட்டெறும்பு போன்ற எழுத்துக்கள். அந்த தாள் கமுகுப்பாளை போலிருந்தது. எழுதப்பட்ட தாளை அருகே ஒரு கொக்கியில் காயப்போட்டிருந்தார் அவன் ;”சாமி” என்றான். அவர் அவனை திரும்பிப் பார்த்தார். பூனைக்கண்களுடன் அவருடைய பார்வை முறைப்பதுபோலிருந்தது. அவனுக்குச் சிறுநீர் வந்தது. அவன் தப்பி ஓடிவிட நினைத்து கட்டுப்படுத்திக்கொண்டான் “சாமி உங்களுக்க வண்டு எனக்கு கிட்டிச்சு. அதை நான் இந்த சட்டியிலே வைச்சதினாலே செத்துப்போச்சு” என்று லாசர் சொன்னான். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “எனக்க குட்டி செத்தது மாதிரி செத்துப்போச்சு” “இங்க வா” என்று அவர் அழைத்தார். அவன் அருகே சென்றதும் அவனை அருகே அழைத்து கைகளால் தோளை வளைத்தார். அவன் தலைமேல் கைவைத்து நன்மைஜெபம் செய்தார்.

@KingTamil

Siru ponmani asaikindra Tamil 3 அவன் பெரிய சாமியாரின் ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். பெரிய சாமியார் லண்டனில் இருந்து வந்தவர். அவர் பஞ்சுபோல வெண்மையான தாடியும் முடியும் வைத்திருந்தார். பூனைக்கண்கள். அவர் மெட்ராசிலிருந்து நடந்தே இடையான்குடிக்கு வந்ததாக வேதக்கண் வாத்தியார் சொன்னார். “ஏலே நடந்துலே… அங்கேருந்து இங்க வரை நடந்து வந்திருக்காரு… எதுக்கு? ஏலே இந்த தேரிக்காட்டிலே இந்த இடையான்குடியிலே நம்மையெல்லாம் ரெட்சிக்கதுக்கு…. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” அவன் அவரை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவர் கையில் நீண்ட பிரம்புடன் பூட்ஸ் அணிந்துகொண்டு நடை செல்வார். அப்போது எவரிடமும் பேசமாட்டார். இரவில் கையில் நீண்ட மூங்கிலும் மறுகையில் அரிக்கேன் விளக்குமாக இடையான்குடியைச் சுற்றிவருவார். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!” என்று கூவிக்கொண்டே செல்வார். “பீடைகளும் பேய்களும் ஓடிப்போகும்லா? அருளுள்ள மனுசனாக்குமே” என்று எசிலி கிழவி சொல்வாள்.