read.cash Log in
@KingTamil

Siru ponmani asaikindra Tamil 3

அவன் பெரிய சாமியாரின் ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். பெரிய சாமியார் லண்டனில் இருந்து வந்தவர். அவர் பஞ்சுபோல வெண்மையான தாடியும் முடியும் வைத்திருந்தார். பூனைக்கண்கள். அவர் மெட்ராசிலிருந்து நடந்தே இடையான்குடிக்கு வந்ததாக வேதக்கண் வாத்தியார் சொன்னார். “ஏலே நடந்துலே… அங்கேருந்து இங்க வரை நடந்து வந்திருக்காரு… எதுக்கு? ஏலே இந்த தேரிக்காட்டிலே இந்த இடையான்குடியிலே நம்மையெல்லாம் ரெட்சிக்கதுக்கு…. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” அவன் அவரை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவர் கையில் நீண்ட பிரம்புடன் பூட்ஸ் அணிந்துகொண்டு நடை செல்வார். அப்போது எவரிடமும் பேசமாட்டார். இரவில் கையில் நீண்ட மூங்கிலும் மறுகையில் அரிக்கேன் விளக்குமாக இடையான்குடியைச் சுற்றிவருவார். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!” என்று கூவிக்கொண்டே செல்வார். “பீடைகளும் பேய்களும் ஓடிப்போகும்லா? அருளுள்ள மனுசனாக்குமே” என்று எசிலி கிழவி சொல்வாள்.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.