Sithada kattikitu singaram Tamil End
லாசர் திரும்பி நோக்கியபோது வாசலில் ஜான்சன் நிற்பதைக் கண்டான். அவன் பாதியுடல் மறைந்து நின்றிருந்தான். பெரியசாமியார் திரும்பியபோது லாசர் கைகூப்பினான். அவர் அவனை நோக்கி புன்னகைத்து “பாரு, உயிர்த்தெழுதல் நடந்தாச்சு” என்றார் லாசர் போவதற்குள் ஜான்சன் முன்னால் சென்று அந்த வண்டைப் பார்த்தான். அது மீண்டும் டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டது. அதன் உணர்கொம்பு அசைந்துகொண்டிருந்தது “சீவன் வந்தாச்சு” என்று ஜான்சன் சொன்னான். “நானாக்கும் இவன்கிட்ட சொன்னது, கொண்டுபோயி பெரிய சாமிகிட்ட குடுலே, அவரு சீவன் குடுப்பாருண்ணு” லாசர் “ஆமா, இவனாக்கும் சொன்னது” என்றான் “ஜெபம் செய்வோம்” என்றார் பெரிய சாமியார். லாசர் மண்டியிட்டான். ஜான்சன் அவனருகே மண்டியிட்டு அமர்ந்துகொண்டு சுற்றும் பார்த்தான். லாசரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. பெரியசாமியாரும் மண்டியிட்டார். “பரமண்டலங்களை ஆளும் என் பிதாவே, அருமைக்குமாரனே, ஆவியானவரே, மானுடரின் பாடுகளை தேவனே நீர் அறிவீர். எல்லா கண்ணீருடனும் உன் கைகளும் உடனிருக்கிறதல்லவா என் ஆண்டவனே! எல்லா இல்லங்களிலும் உன் காவல் அமைகிறதல்லவா என் மீட்பனே! எங்கள் ஆத்மாக்களை தொட்டு உயிர்த்தெழவைக்கும் தூயநீர் அல்லவா உன் சொல்!”
No comments yet