Siru ponmani asaikindra Tamil 7
அவன் வாசித்து நிறுத்தியதும் பெரிய சாமியார் கைகூப்பி “பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே” என்றார். சபை ரீங்காரமிட்டது. “நம்புங்கள், இறந்து மீண்டும் உயிர்த்தெழாமல் எவரும் தேவனை அடைவதில்லை. இறப்பு என்பது ஒரு குளியல். இறப்பு என்பது ஒரு வாசல். இறப்பினூடாகவே நாம் மெய்யான தேவனை அடைகிறோம். அவருடைய ஆணையாலே நாம் உயிர்த்தெழுவோம்” என்றார். லாசருக்கு கடுமையாக குளிர்ந்தது. அவன் முனகியபடி எழமுயன்று சுருண்டு விழுந்தான். அவன் உடலில் இருந்து சூடாக சிறுநீர் சென்றுகொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். “குட்டி குட்டி” என்று அவன் கூவினான். “குட்டி இங்க நிக்கா… எனக்க குட்டி இங்க நிக்கா!”
1 comment
அவன் அருகே சென்றதும் அவனை அருகே அழைத்து கைகளால் தோளை வளைத்தார். அவன் தலைமேல் கைவைத்து நன்மைஜெபம் செய்தார்.