Karu Kurunaval Tamil Part 14
செப்டெம்பர் ஆறாம் தேதி அவர்கள் கிளம்பியபோது கடுமையான பனிப்புயல் வீசியது. அது ஓய்வதற்காக காத்து நின்றிருந்தனர். அதன்பின் கிளம்பி நகரிலிருந்து வெளியே சென்றபோது அத்தனை கட்டிடங்களிலும் சுவரோரமாக மலைமலையாக பொருக்குப்பனி குவிந்து கிடந்தது. செத்த மீன் போலிருந்தது நாக்சு நகரம். வெள்ளி மின்னிய அதன் தெருக்களில் இருந்து அழுகல்வாடை எழுந்தது. அவர்கள் நகரிலிருந்து வெளியேறும்போது பனித்துகள்கள் பறந்துகொண்டிருந்த சாலையோரத்தில் சூசன்னா மீண்டும் அந்த வெள்ளை இளைஞனைக் கண்டாள். அவள் பரபரப்புடன் “அதோ, அதோ அவன்” என்று சுட்டிக்காட்டினாள். ஆனால் பெட்ரூஸ் பார்ப்பதற்குள் பனிப்படலத்தை தூக்கி அனைத்தின் மேலும் திரையென இறக்கியது காற்று.
No comments yet