Ven murasu Nool Tamil 2

4 16
Avatar for rmktamilsoft
4 years ago

பிரஃபாச க்ஷேத்ரத்துக்கான செல்வழி எவர் உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. செல்லும் வழி சரிதானா என்ற ஐயமும் இருந்தது. மூத்தவரான சுருதன் எங்கள் குழு மூத்த காவலர்தலைவனை அழைத்து “இங்கு நிலப்பகுதியை நன்கு அறிந்த ஒற்றர் சிலர் என் அறிதலில் உள்ளனர்… பெயர்களை தருகிறேன். உடனே அவர்களை அழைத்து வருக!” என்று ஆணையிட்டார். ஒற்றர்கள் பலர் அந்நிலத்தில் பரவியிருந்தார்கள் என்றாலும் அவர்களிடையே ஒருங்கிணைப்பு முற்றாக இல்லாமலாகிவிட்டிருந்தது. கிருஷ்ணைக்கு மட்டுமே முறையான தனிப்பட்ட ஒற்றர் அமைப்பு இருந்தது. அதில் பலரை சுருதனுக்கு தெரியும். அவர்களை கொண்டுவந்து ஃபானுவிடம் சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்க அவர் முயன்றார்.

அவர் அந்தப் பொழுதில் மெல்லமெல்ல தன் கையில் ஆட்சியை எடுத்துக்கொள்ள முயல்வதை நான் கண்டேன். சாம்பன் ஆட்சிசெய்தபோது அவர் சாம்பனின் ஆதரவாளராக, பின் இரண்டாமிடத்தவராக ஆகி ஒரு கட்டத்தில் ஆணைகளை பிறப்பிப்பவராக மாறினார். கிருஷ்ணையால் வெளியே நிறுத்தப்பட்டார். இப்போது கிருஷ்ணையை வெல்ல ஃபானுவை சார்ந்திருக்கிறார். ஃபானுவிடம் உரிய கருத்துக்களை அழுத்தமாகச் சொன்னார். அப்போது ஃபானுவால் வசைபாடப்பட்டார். ஆனால் பின்னர் ஃபானு அங்கே வந்து சேர்ந்தபோது அவருடைய உள்ளத்தில் சுருதன் ஆற்றல்கொண்டவர் என்னும் எண்ணம் ஏற்பட்டது. சுஃபானு அவையில் இருந்து விலகி இரு உடன்பிறந்தாருடன் தனியாகவே வந்தார். அந்த இடத்தை கைப்பற்ற சுருதன் முயன்றார்.

4
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

என்னை மிகவும் கவர்ந்தது பத்து லட்சம் காலடிகள், மற்றும் கைமுக்கு கதையும் – ஒரு தந்தை

$ 0.00
4 years ago

நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும்

$ 0.00
4 years ago

உளம்போன போக்கில் கால்களை செலுத்துகிறார்களா?” என்றார். “இல்லை

$ 0.00
4 years ago

வசனங்களை உங்களுக்குள் வாங்கிக் கொள்வதால், வேறு எந்த சாதனத்தின் உதவியும் கொண்டு படிப்பதை விட

$ 0.00
4 years ago