Sirukathaikal Valka Tamil 10

4 16
Avatar for rmktamilsoft
4 years ago

கதைகளை நூலாக்கும்போது இந்த வகைப்பாடு சார்ந்தே செய்யவேண்டும் என நினைக்கிறேன். பலநூல்களாகவே செய்யமுடியும்.

ஒருகதை எழுதும்போது அந்த தீவிரநிலைதான் இன்னொரு கதைக்கான தூண்டுதலை அளிக்கிறது. இன்னொரு கதையை கொண்டுவந்து அளிக்கிறது. உலக இலக்கியத்தின் பிதாமகர்கள் இதைப்பற்றி நிறைய எழுதிவிட்டார்கள்

ஆச்சரியமான சில உண்டு. என் கதைகள் பெரும்பாலும் குமரிநிலம்விட்டு விலகாதவை. இப்போதுதான் அவை விரிந்து வேறுநிலங்களுக்குச் செல்கின்றன. என் தொழில்களமான செய்திதொடர்புத்துறை பற்றி நான் எழுதியதே இல்லை. என் மனதைக் கவர்ந்த காசர்கோடு பற்றி ஒருவரி கதைகூட எழுதியதில்லை. அவையெல்லாமே இப்போதுதான் எழுத்தில் வருகின்றன

இப்போதுகூட என்னை உலுக்கிய பல தனிநிகழ்வுகள் பற்றி ஏதும் எழுதவில்லை. என் நண்பன்,அப்பா, அம்மாவின் தற்கொலை, என் அலைச்சல் நாட்கள் கொந்தளிப்பானவை. நான் சுனாமியில் கண்ட வாழ்வனுபவங்கள் உக்கிரமானவை. அவற்றை எழுதவில்லை. அவற்றிலிருந்து கதை வரவில்லை, அவ்வளவுதான்

என் குடும்பம் பற்றிக்கூட பெரிதாக எழுதியதில்லை. ஆனால் இத்தனை எழுதிய பின்னரும் அம்மா பற்றி ஒரு கதை வரவில்லை. ஏன் என்றே தெரியவில்லை

3
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர்

$ 0.00
4 years ago

சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ மூன்றாகவோ ஒழுகி வழி கண்டடைந்து நின்று ஒருங்கிணைந்துகொண்டது

$ 0.00
4 years ago

வரலாறுகளின் பிண்ணனியில் அது பேசப்ப்ட்டிருப்பதில் இருந்தே தொகுக்க வேண்டியிருக்கிறது

$ 0.00
4 years ago

இந்நிலத்தை நன்றாகவே எனக்குத் தெரியும்” என்றார் சுருதன். “எனில் கூறுக, இப்போது நாம் செல்லும் வழி சரிதானா

$ 0.00
4 years ago