Venpani malareun Vasam Tamil 8

3 25
Avatar for rmktamilsoft
3 years ago

பின்னர் நான் அதை புரிந்துகொண்டேன். ஒவ்வொரு தரப்பினரிடமும் பூசலை எழுப்புவதற்கான சிலர் இருந்தனர். எந்நேரமும் கொதிநிலையில் இருப்பவர்கள், ஒரு சிறு பூசலையே கடுமையான சொற்களால் உடல் கொந்தளிக்கும்படி மாற்றுபவர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் இழிபொருள் கண்டடைபவர்கள்.தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும் யாதவர்களுக்குள்ளே ஒரு பூசல் வெடிக்கக்கூடும். ஒவ்வொருமுறை பேச்சுகள் உச்சத்தை அடையும்போதும் இதோ படைக்கலங்களுடன் எழுந்து தாக்கப்போகிறார்கள் என்று எண்ணி நான் நடுங்கினேன். ஆனால் பொங்கி எழுந்து ஓர் உச்சத்தை அடைந்து ஏதோ இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.

2
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

எப்பவும், இன்பம் தரும் இனிமையான சொற்களையே பேசி வருபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள்.

$ 0.00
3 years ago

நாம் இதை ஒப்ப இயலாது. இவ்வாறு பெருகும் வெறுப்பு உறுதியாக போராக வெடிக்கும், ஐயம் தேவையில்லை

$ 0.00
3 years ago

அவர்களை தனித்தனியாக பிரித்தால் ஒவ்வொருவரும் உடல் சோர்ந்துவிடுவார்கள். அவர்களால் இப்பணியை செய்ய இயலாது

$ 0.00
3 years ago