Venpani malareun Vasam Tamil 13

1 20
Avatar for rmktamilsoft
3 years ago

ஃபானு எரிச்சலுடன் “அதை எவரும் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே. இத்தனை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவது கருவூலம் அன்றி வேறென்ன?” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்?” என்றார். ஃபானு “எவர்?” என்றார். “எவராயினும்… இக்கருவூலம் பேரரசு ஒன்றின் ஐம்பதாண்டுக்கால செல்வம். இதற்கிணையான ஒன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்றார் சுருதன்.

ஃபானு திகைத்துவிட்டார். சுருதன் அதை பயன்படுத்திக்கொண்டு மேலே சென்றார்.

2
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments

வந்த சுருதன் “மூத்தவரே, தாங்கள் அதை அவ்வண்ணம் சொல்லியிருக்கக் கூடாது

$ 0.00
3 years ago