KalingathuBharani Tamil Part 1

2 10
Avatar for rmktamilsoft
4 years ago

படை பெருத்ததால் பார் சிறுத்ததோ

பார் சிறுத்ததால் படை பெருத்ததோ

ஜெயங்கொண்டார் , கலிங்கத்துப்பரணியில் இதைச் சொன்னாலும் சொன்னார் , மேடைக்கு மேடை , பார்த்தாயா தமிழனின் புஜ பல பராக்ரமத்தை என்று கொக்கரிப்பு எங்கும் .

விஷயத்துக்கு வருவோம் . தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னன் , குலோத்துங்கன். அவன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுவதில்லை . Iron Man , Hulk , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கற்பனை வீரசாகச படங்களை பார்த்து வளர்ந்த சமூகம் போரிற்கான விலையை யோசிப்பதில்லை . போர் என்பது ஏதோ , தொடையை தட்டி என் மச்சினிச்சிக்கு மஞ்சள் அரைத்தாயா , என்னை எதிர்க்க உங்களிடம் திராணி இருக்கிறதா போன்ற உப்பு பெறாத கேள்விகளை கேட்பது என்று எண்ணுகிறார்கள் . அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை . நாம் வளரும்பொழுது , நமக்கு கூறப்பட்ட கற்பிதங்கள் அப்படி . அது தான் அவர்களை நரம்பு புடைக்க பேசும் எவரையும் நம்ப வைக்கிறது , நயமாய் பொய் சொன்னாலும் , உரக்கச் சொன்னால் அதற்காக உயிரை கொடுக்க வைக்கிறது .

ஆக , குலோத்துங்கன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் , யார் மீது போர் தொடுத்தான் ?

அவன் போர் தொடுத்தது , ஆனந்தவர்மன் சோட கங்கன் மீது. இன்னும் தெளிவாய் கூறவேண்டுமானால் , ஆனந்தவர்மன் சோட கங்கனின் தாய் வழி மாமன் முதலாம் குலோத்துங்கன் . காரணம் , வரி கட்டாதது .

4
$ 0.50
$ 0.50 from @G4ceTech
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

உறவு வைத்து உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்ட

$ 0.00
4 years ago

இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று.

$ 0.00
4 years ago