Sirukathaikal Moondru Tamil Part 8

2 11
Avatar for KingTamil
3 years ago

வைத்தியர் ஞானப்பிரகாசம் வெளியே வந்தார். உள்ளே அம்மா உரக்க அலறி அழுதாள்.

“நல்லதாக்கும் கடிச்சிருக்கு… நீலம் கேறிப்போச்சு” என்றார் வைத்தியர் ஞானப்பிரகாசம்.

அப்பா கைகளைக் கட்டி தலைகுனிந்து நின்றார்.

கிழவி அவனிடம் “எங்கலே போனே?” என்றாள். அவன் ஒன்றும் சொல்லாமல் ஒட்டுத்திண்ணையில் ஏறி சுவர் சாய்ந்து நின்றான்

உள்ளே இருந்து அம்மா வெறிகொண்டவள் போல ஓடிவந்து அதே விசையில் நெஞ்சறைய விழுந்து நிலத்தில் இரு கைகளாலும் ஓங்கி ஓங்கி அறைந்தபடி “எனக்க மோளே! எனக்க செல்லமே! எனக்க முத்தே!” என்று அலறி அழுதாள்.

அவளுக்கு பின்னால் வந்த பரிசுத்தம் மாமி “போச்சு” என்றாள்.

அப்பா சற்று நிலைதடுமாறினார். பாட்டா அவரை பிடித்துக்கொண்டார். அப்பா அப்படியே மண்ணில் கால்களை பரப்பி அமர்ந்துகொண்டார்.

2
$ 0.00
Avatar for KingTamil
3 years ago

Comments

வண்டுன்னாக்க இப்பம் நம்மள கடிக்க வரும்லா?” என்றான் ஜான்சன்.

“ஆமா, கடிக்க வரும்லா?” என்றான் லாசர்.

$ 0.00
3 years ago

Dont understand the language! But it would be something great!

$ 0.00
3 years ago