1
3
வாலிருக்கு” என்றான் ஜான்சன். “ஏலே அதுக்கு சீவனிருக்கு, பாரு”
அது டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டுக்கொண்டிருந்தது.
“ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான்.
‘தொடாதே” என்று ஜான்சன் சொன்னான். “அது விசவண்டாக்கும்… பாருலே அதுக்க கண்ணை…கொடுக்கு சுத்துது பாரு”
அதற்கு புள்ளிப்புள்ளியாக கண்கள் இருந்தன. அவை இளநீல நிறத்தில் மின்னிக்கொண்டிருக்க கொடுக்கு ஓவ்வொரு கண்ணையாக தொட்டு தொட்டு துடித்து ஓடிக்கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர்.ஜான்சன் நீண்ட பெருமூச்சுவிட்டு ‘விச வண்டாக்கும்” என்றான்.
லாசரும் “விச வண்டாக்கும்” என்று சொல்லிக்கொண்டான்.
“என்னலே செய்யுதது?” என்று ஜான்சன் கேட்டான்.
ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான். ‘தொடாதே” என்று ஜான்சன்