Karu Kurunaval Tamil Part 7

1 21
Avatar for KingTamil
3 years ago

அவன் ஏதும் சொல்லாமல் தலைவணங்கி முன்னால் சென்று மறைந்தான்.

அவள் அவனை பதைப்புடன் பார்த்திருக்கையில் பெட்ரூஸ் கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி வந்தார். “இது சலிப்புற்றிருக்கிறது. நம்மை விட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறது” என்றார்.

“பேட், நாம் செல்லவேண்டிய வழி அது. அந்த மலைப்பிளவு…”

“அதற்கப்பால் வழி இல்லை… அது செங்குத்தான மலைவிளிம்பு” என்றார் பெட்ரூஸ் “இந்தவழியாகச் செல்வோம்… நமக்கு வேறுவழியில்லை.”

“இல்லை, அதுதான் வழி. இங்கே இப்போது ஒர் இளைஞன் வந்தான். அவன் அந்த வழியை எனக்குச் சுட்டிக்காட்டினான்.அவன் இங்கேயே இருப்பவன், அவனுக்கு தெரிந்திருக்கும்.”

“உளறாதே… இங்கே எவர் வரமுடியும்? வந்தால் அவன் எங்கே?”

2
$ 0.00
Avatar for KingTamil
3 years ago

Comments

Hey! I dont know tamil language!so I couldnot read this...hoping some new articles that can be read worldwide.. Yet you are doing great job man...keep it up...keep providing us some good articles..and best of luck to you.

$ 0.00
3 years ago