Karu Kurunaval Tamil Part 18

0 14
Avatar for KingTamil
3 years ago

அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். அது வணிகப்பாதை என்பதனால் ஆங்காங்கே இரவு தங்குவதற்கான இடங்கள் இருந்தன. அவை பளிச்சிடும் செம்மஞ்சள் கொடிகளால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன.

செப்டெம்பர் 26 ஆம் தேதி அவர்கள் ஒரு வழிமுனையைச் சென்றடைந்தனர். இரண்டு பாதைகள் அங்கே பிரிவதுபோல தோன்றியது. இரண்டில் எதை தெரிவுசெய்வது என்று தெரியவில்லை. அவர்கள் அங்கே திகைத்து நின்றனர். பெட்ரூஸ் அப்போது தொலைவில் ஒரு புகையை கண்டார். அது ஓர் ஆற்றுக்கு அப்பால் எழுந்தது. அது போ-சு என்னும் ஆறு.

“அது புகைதானா?”என்றார் “அல்லது மேகமா?”

“புகையேதான்… நாம் அங்கே செல்வோம்”

1
$ 0.00
Avatar for KingTamil
3 years ago

Comments