Karu Kurunacval Tamil Part 1

2 14
Avatar for KingTamil
3 years ago

முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான்.

சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் உச்சியில்.

அவர்கள் தன்னந்தனியாக அந்த மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தனர். ஓரிரு நாட்களுக்கே அவர்களிடம் உணவும் நீரும் இருந்தது. சுற்றிலும் மானுடவாழ்க்கைக்கான எந்த தடையத்தையும் அவர்கள் காணவில்லை. அவர்கள் தனித்து, களைத்து, உயிரின் துளி மட்டுமே உடலில் எஞ்ச நடந்து கொண்டிருந்தனர்.

2
$ 0.00
Avatar for KingTamil
3 years ago

Comments

Hey! I dont know tamil language!so I couldnot read this...hoping some new articles that can be read worldwide.. Yet you are doing great job man...keep it up...keep providing us some good articles..and best of luck to you.

$ 0.00
3 years ago

no worry,one day you will learn

$ 0.00
3 years ago