0
5
வாக்மேன் இல்லாமல் ஓடலாம் என்று முடிவு செய்து அப்படியே அது இல்லாமல் ஓடினேன். நல்ல வெய்யில். சீராக ஒரே வேகத்தில் ஓடினேன். வாசித்துக் கொண்டிருக்கும் "நான்காம் சுவர்" புத்தகத்தில் வருபவர்கள் மனதில் வந்து கொண்டே இருந்தார்கள். அந்த மாதிரி பலரை நானும் பார்த்திருக்கிறேன். அலுவலகம் வரும் வரை வேறு எதையும் எண்ணவில்லை.
ஒரு விதமான கம்பீரம் ஒரு வகையான சோகம் கலந்த இசை. எனக்கு நாதஸ்வரத்தையும் வித்துவான்களைபயும் பற்றி ஒன்றும் தெரியாது. பலமுறை கேட்டதுண்டு. இதுவே நாதஸ்வரத்திற்கும் எனக்கும் உள்ள உறவு.
ரத்தினம் என்ற நாதஸ்வர கலைஞர் பிடரியில் அடி வாங்குகிறார். இதுவும் இந்த சொற்களோடு "தாயோளி, நிறுத்துறா, சாமிக்கு யாரு வில்லு குடுக்கிறதுங்கிற பிரச்சனையே முடியல,