Iraivanidam kaiyendhungal Tamil 6

0 10
Avatar for G4ceTech
3 years ago

அடிமையாக இருக்கும் பெண்களுக்குக்கூட நல்லொழுக்கம் கற்றுக் கொடுத்து அந்த பெண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து, அவரையே திரும ணம் செய்து கொள்ளவும் இஸ்லாம் ஆர்வமூட்டி இவ்வாறு நடப்பவர்களுக்கு இரு மடங்கு கூலி உண்டு என்று சொன்னதிலிருந்து இஸ்லாம் பெண்களை எவ்வாறு மதித்துள்ளது என்பதை விளங்கலாம்.

சிறந்தவர்

ஒரு மனிதரை நல்லவரா? கெட்டவரா? என்று எடைபோட இஸ்லாம் பெண்களையே அளவு கோலாக வைத்துள்ளது. தம் மனைவியிடம் நல்ல குணத்தில் நடந்து கொள்பவர்தான் ஆண்களிலேயே சிறந்தவர் என்று இஸ்லாம் கூறுகிறது.

முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி (1082)

1
$ 0.00
Avatar for G4ceTech
3 years ago

Comments