Venpani malareun Vasam Tamil 26

0 28
Avatar for rmktamilsoft
4 years ago

நானும் அதை அப்போதுதான் உணர்ந்தேன். “ஒரு முடிவு கூறப்பட்ட உடனே அத்தனை பேரும் சேர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அனைவரும் அந்த முடிவை நோக்கி முன்னரே வந்திருக்கிறார்கள். அதை அரசர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அரசர் இப்போது மக்களுக்கு ஆணையிடவில்லை. மக்கள் அரசருக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆக இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்றார் சாத்யகி. “ஆம், முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளையாவது நாம் எண்ணவேண்டும்” என்று கிருதவர்மன் கூறினார்.

1
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments