Venpani malareun Vasam Tamil 25

0 28
Avatar for rmktamilsoft
4 years ago

சாத்யகி “ஆம், இதை நான் முன்னரும் கேட்டிருக்கிறேன்” என்றார். “துவாரகையின் மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா? அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா?” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம்? எந்த ஒரு முடிவுக்கும் மக்களில் ஒரு சாரார் ஐயம் தெரிவிப்பார்கள். ஒரு சாரார் மறுப்பு தெரிவிப்பார்கள். பெரும்பான்மை உணர்வுகள் எழுந்த பிறகு மெல்ல மெல்லத்தான் ஒற்றை உணர்வு உருவாகும். பெரும்பான்மை நோக்கியே எஞ்சியவர்கள் வந்து சேர்வார்கள். இது விந்தையாக உள்ளதே.”

1
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments