Venpani malareun Vasam Tamil 24

0 20
Avatar for rmktamilsoft
3 years ago

அதைத்தான் இங்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்தபின் அவர்கள் எதையும் கணிக்கவில்லை” என்றார் கிருதவர்மன். எனக்கு உடனே அது உண்மை என்று தெரிந்தது. “ஆம், அவ்வாறுதான் இருக்கவேண்டும்” என்றேன். பின்னர் அச்சத்துடன் “அவர்கள் ஒற்றர்களா?” என்று கேட்டேன்.

“ஒற்றர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒற்றர்கள் நிமித்திகர்களாக வருவதும் இல்லை. இவர்கள் எளிய தெருநிமித்திகர்கள். அரசருக்கு நூல் நவின்று சொல்லும் தகுதி உடையவர்கள் அல்ல. அவர்களை அழைத்து குறிகேட்டபோது உடனடியாக நெஞ்சிலிருப்பதை சொன்னார்கள். அவர்களின் அந்த எண்ணம் துவாரகையின் குடிகளுக்கு ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அது உடனே இவர்களின் நெஞ்சில் எழ அவ்வண்ணமே சொல்லியிருக்கிறார்கள்.”

1
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments