Venpani malareun Vasam Tamil 23

0 17
Avatar for rmktamilsoft
3 years ago

நான் ”தெரியவில்லை, தந்தையே” என்றேன். “அறிவிலி, அவர்கள் முன்னரே அதை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முடிவை எடுத்தபின் அதை நெடுநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தரையில் களம் வரைத்து கவடி நிரப்பி கணித்து கூறினார்கள்” என்றேன். “திசை மட்டும் சொன்னார்களா இடத்தையும் சேர்த்துச் சொன்னார்களா?” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா?” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்?” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்?” என்றார்.

1
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments