Venpani malareun Vasam Tamil 22

0 19
Avatar for rmktamilsoft
3 years ago

கிருதவர்மன் “அவன் பல தருணங்களில் வெறும் உணர்ச்சிகளால் இயங்கும் யாதவர் போலவே இருக்கிறான்” என்றார். சாத்யகி “அவர் எப்போதும் அப்படித்தான்” என்றார். “எங்கு செல்கிறான்?” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்?” என்றார். “இத்தனை தெளிவாக எந்த நிமித்திகரும் கூறுவதில்லை.”

1
$ 0.00
Avatar for rmktamilsoft
3 years ago

Comments