read.cash Log in
@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 5

இருமடங்கு கூலி 1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார். 2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான். 3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதை யும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடி மைத்தளையிருந்து விடு தலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் :புகாரி (97)

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.