Tamil jothida palan 2

0 18
Avatar for Entertainment-Creator
3 years ago

வான்மண்டலத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையை அனுசரித்து அதன் அடிப்படையில் விரதமிருந்தால் உடல்,மனம் மற்றும் ஆன்மா உயர்லையை அடையும் என்கிறார்கள். இந்து மதம் மட்டும் அல்லாமல் எல்லா மதத்தினரும் விரதத்தை கடைபிடிப்பது, விரதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என காட்டும்.

இந்திய கலாச்சாரத்தில் பலதரப்பட்ட விரத அனுஷ்டானங்கள் உண்டு.இதில் திதி மற்றும் வாரதினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும். ஏகாதசி, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதிகளிலும் மற்றும் திங்கள் (சோம வாரம்) , வியாழன் (குருவாரம்) போன்ற வாரநாட்களிலும் விரதமிருப்பது நன்று.

சட்டியில் இருந்தால் - அகப்பையில் வரும் - என்பது பழமொழி. இது காலத்தால் மருவி இந்த நிலையில் உள்ளது. இதன் உண்மையான கருத்து " ஷஷ்டியில் இருந்தால் -அகப்பை வளரும்".

2
$ 0.00
Avatar for Entertainment-Creator
3 years ago

Comments