read.cash Log in
@ChemRaj

Sitharpadalkal Pattinathar Tamil

பட்டினத்தாரின் தமிழ் பாடல்கள் மிக மிக எளிமையானவை. நிலையாமை, பெண்கள் மேல் கொள்ளும் அதீத ஆசை, ஏழைகளுக்கு உதவுவது, போன்ற கருத்துகளை மிக எளிய தமிழில் பாடியிருக்கிறார். உறவுகள் எல்லாம் பொய் என்று சொல்ல வந்த பட்டினத்தார், ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13 சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது என்று பொருள் . ஊரும் சதம் அல்ல - எனக்கு சொந்த ஊரு மதுரை அப்படின்பாங்க்ய ..என்னமோ அதை இவரு காசு போட்டு வாங்கின மாதிரி. அங்க பொறந்து வளர்ந்து இருப்பாரு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வீடு இருக்கும். கேட்டா அந்த ஊரே "சொந்த ஊரு" அப்படின்னு சொல்ல வேண்டியது.

50¢

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.