read.cash Log in
@ChemRaj

Read Beautiful Poem Tamil

ஜெருசலத்து நகரின் வீதியில் கல்வாரி மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தேன் நெருக்கமான கடைகளும் கூட்டமாக மனிதர்களும் சற்றே களைப்புற்ற பயணத்தின் இடைவெளியில் இயேசுவைச் சந்தித்தேன் அவர் முக்காடிட்டிருந்தார் தேவரீர் ஏன் முக்காடிட்டிருக்கிறீர் எனக் கேட்டேன் ஒருவரும் என்னைத் தரிசிக்க விரும்பவில்லை மேலும் நான் வியாபாரப் பொருளாகிவிட்டேன் வியாபாரிகள் யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை கைப்பையிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அவரிடம் தந்தேன் அவர் தன் முகத்தையும்கூடக் காண்பதற்கு விரும்பவில்லை என்றார் தன் முகமும் தன் இருப்பும் மனிதத் திரையில் மறைந்திருப்பதாகவும் கூறிக் கடந்தார் அவர் நடந்து செல்லும் பாதையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் இருளில். -சக்தி ஜோதி

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.