Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage Part 3 Tamil
முரகாமி தனக்கே உரிய பாணியில் பலவித உளவியல் விசயங்களை சுக்குரு மூலம் விவரித்துள்ளார். ஒருவனை அவன் யாரென்று எப்படி மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதையும் அந்த நான்கு நண்பர்களின் முடிவுகொண்டு விவரித்துள்ளார்.கனவில் வரும் கற்பழிப்புகள் மற்றும் தன் புதிய ஆண் நண்பருடன் உறவு பற்றிய விவரங்கள் ஏன் என்றே தெரியாமல் தவிக்கும் சுக்குரு. ஏன் இந்த கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. இந்த பயணம் மற்றும் சந்திப்புக்கள் அவனுக்கு அமைதி தந்ததா ? என்ற கேள்வி தொங்கிக்கொண்டே இந்த நாவல் முடிகிறது. முரகாமிக்கே உரிய நடையில் முடிகிறது. என்னைப் பொறுத்தவரை சுக்குரு தனது மன அமைதியை கண்டுகொண்டான் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவன் தேடல் நிற்கவே நிற்காது. அவனுடைய குணம் அப்படிதான் அவன் அதை அறியாவிட்டாலும்.
No comments yet