Moondru Dinosar kalangal Tamil 5
உள்ளே இருந்த பொருள் வட்டமாக இருந்தது. அப்பச்சியின் சுண்ணாம்புச் செப்பு போல. அதற்கு நீளமான வால் இருந்தது. வாலைச் சுருட்டி அருகே வைத்திருந்தது. ஈரமண்ணில் நத்தை ஊர்ந்து உருவாகும் ஒளிக்கோடு போன்ற வால். “வாலிருக்கு” என்றான் ஜான்சன். “ஏலே அதுக்கு சீவனிருக்கு, பாரு” அது டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டுக்கொண்டிருந்தது. “ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான். ‘தொடாதே” என்று ஜான்சன் சொன்னான். “அது விசவண்டாக்கும்… பாருலே அதுக்க கண்ணை…கொடுக்கு சுத்துது பாரு” அதற்கு புள்ளிப்புள்ளியாக கண்கள் இருந்தன. அவை இளநீல நிறத்தில் மின்னிக்கொண்டிருக்க கொடுக்கு ஓவ்வொரு கண்ணையாக தொட்டு தொட்டு துடித்து ஓடிக்கொண்டிருந்தது.
2 comments
Keep writing friend...You inspire me !
ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான் ‘தொடாதே” என்று ஜான்சன்