read.cash Log in
@KingTamil

Moondru Sirukathaikal Tamil 3

லாசர் பயத்துடன் “இத என்ன செய்யுதது?” என்றான். அதை அந்த வண்டு கேட்டுவிடக்கூடாது என்பதுபோல குரலைத் தாழ்த்தியிருந்தான். ஜான்சன் தலையைச் சரித்து யோசித்தான். அவனுக்குத்தெரியாதவை என ஏதுமில்லை. ஆனால் கொஞ்சம் யோசிக்கவேண்டும். “இது விசவண்டு இல்லேன்னு தோணுது” என்று அவன் சொன்னான். “ஏன்?” என்று லாசர் கேட்டான். “விச வண்டுன்னாக்க இப்பம் நம்மள கடிக்க வரும்லா?” என்றான் ஜான்சன். “ஆமா, கடிக்க வரும்லா?” என்றான் லாசர். ஜான்சன் மேலும் யோசித்தபின் “விசமிருந்தா இப்டி பேசாம இருக்காது…” என்றான். மேலும் அதை கூர்ந்து நோக்கி “அளகாட்டு இருக்கு….” என்றான். “அளகாட்டு இருக்கு” என்று லாசர் சொன்னான். “இத நாம வளப்போம்லே” என்றான் ஜான்சன். “அய்யோ” என்றபடி ஜான்சன் எழுந்துவிட்டான். “ஏலே, சிலசமயம் இது குட்டிபோட்டிரும் பாத்துக்க…குட்டிபோட்டா நமக்கு லாபம்தானே

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.