read.cash Log in
@KingTamil

Moodru Dinosar kalangal Tamil 2

ஆனால் ஒருநாளைக்கு நூறுமுறைக்குமேல் அவை புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்துக்கொண்டுவந்து ஊட்டுகின்றன. அந்த சிற்றுயிர்களுக்கு அவை டைனோசர்கள்தான். புகைப்படத்தை பார்க்கையில் குட்டி டைனோசர்களின் தூக்கத்தைக் கண்டு மனம் மலர்கிறது. அவற்றின் ஆவேசமான வாய்திறப்பைக் கண்டு சிரிப்பு வருகிறது. வளர்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது என்னலே அது?” என்றபடி ஜான்சன் ஓடி அருகே வந்தான். லாசர் அதை உடனே மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டான். “ஏலே என்னலே அது? ஏலே சொல்லுலே” என்றான் ஜான்சன். லாஸர் அதை அவனிடமிருந்து எப்படி மறைப்பது என்று தெரியாமல் “ஒண்ணுமில்லே” என்றான். அவன் முகமும் உடலும் எல்லாவற்றையும் காட்டின. அவன் பதறிப்போயிருந்தான்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.