Iraivanidam kaiyendhungal Tamil End
முஃமின்களின் முன் மாதிரி சொர்க்கத்தை பெறுவதற்காக இறைவனுக்கு தியாகம் செய்தவர்களின் முன்மா திரியாக அல்லாஹ் இரு பெண்களை சுட்டிக்காட்டுவது பெண்ணினத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் ஒரு மகுடமாக சொல்லலாம். "என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்பு வாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என் னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பா யாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமா கக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகி றான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். அல்குர்ஆன் 66:11,12) எனவே பெண்கள் என்பவர்களை போகப் பொருளாக பயன்படுத்தாமல் குணம் நிறைந்த மங்கையாகவும் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் அரிய பொக்கிஷ மாகவும் நினைத்து பெண் குழந்தைகளை மகிழ்வோடு வளர்ப்போம்.
No comments yet