read.cash Log in
@ChemRaj

Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love Part 2

உன் நினைவு விழி மூடும் நேரம் எல்லாம் வீணாக போனதில்லை..!! விண்ணை தொடும் உன் நினைவு உள்ளுக்குள் உட்கார்ந்து என்னை தினம் தாலாட்டுதடி பெண்ணே ! ஏனடி.... நீ.... ஆர்ப்பரிக்கிறாய் ? ஆபத்து வரப்போகுதென்று...! உனக்கேன் தெரியவில்லை...? உன் அழகை விட ஆபத்து உலகில் எதுவுமில்லையென்று. என் வாழ்வில் நீ இல்லாமல் போகலாம்.... என் காதலில் நீ மட்டுமே இருப்பாய்!! உன்னை காதலிக்கிறேன் எனக்கு.. பேச்சை குறைத்துக்கொள்ளவும் தெரியவில்லை..- சரியாக பேசவும் தெரியவில்லை.. இருந்தும்..-- உன்னிடம் சரியாகத்தான் கூறினேன்... ""உன்னை காதலிக்கிறேன் என்று.!! நீ தான் ..என்னை பைத்தியம் என்று.! பைத்தியமாக்கி செல்கிறாய் நீ எனைக்காணும் போதெல்லாம்.. நீ எனைக்காணும் போதெல்லாம் நினைத்துப்பார்கிறாயா என்று தெரியவில்லை! !! ஆனால்., நான் உனைக்காணும் போதெல்லாம் நனைந்து விடுகிறேன் கண்ணீரால்,., உன் நினைவுகளுடன்..

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.