read.cash Log in
@ChemRaj

Recently Read Beautiful Poem Tamil

கோடைமழைக்குப் பிந்திய இந்த அதிகாலையில் வாகை மரத்தினடியில் நிற்கிறேன் இந்த வாகை மரம்தான் எத்தனை பெரியது எத்தனை எத்தனை பூக்கள் இளமஞ்சளாய் மலர்ந்திருக்கின்றன என்றபோதும் வாகை மரம் புறக்கணிக்கப்பட்ட மரங்களில் ஒன்று நானும் வாகையும் இவ்விதத்தில் ஒன்றுதான் ஓர் இனத்தின் முன்னே பெண்ணாக விருட்சங்களின் நடுவே வாகையாக புறக்கணிப்பின் வேதனையை அறிந்தவர்களாக வேர்கள் நிலத்திலும் கிளைகள் ஆகாயத்திலுமாய் வியாபித்திருக்கிறோம் வெற்றியை அறிந்திடச் செய்பவர்கள்தான் நாங்கள் வாகையும் நானும் ஒருபோதும் நிழலுக்காகவோ பூக்களுக்காகவோ வளர்க்கப்படவில்லை என்றறியும் ஒருவன் வாகை மலரைச் சூடிக்கொள்ளும் இரவில் நிராகரிப்பின் வலி மறந்து பெருமையடைவேன்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.